மேலும் அறிய

“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரிப்பா, லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் பதிவால் பெரும் பரபரப்பைபடுத்தியுள்ளது.

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  கடிதம் எழுதியது திருச்சியில்  திமுகவினர் மத்தியில் பெருன் அதிர்வலை ஏற்படுத்தியது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று கேன்.என்.நேரு தரப்பே ஆர்டர் போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.


“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்த சௌந்தரபாண்டியனுக்கு தேர்தலில் போடியிட வாய்ப்பு .. 

கே.என்.நேரு முதன் முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது  இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான கானக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான்.  

அவர் நான்கு முறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறது.


“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

தான் இறந்துவிட்டதாக தானே பதிவிட்ட திமுக  எம்.எல்.ஏ வால் பரபரப்பு 

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு , தொகுதியின் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு அழைப்புதல் விடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும் ,அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு கொடுக்கவில்லை. 

அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர் நேரு அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏ வை ,  ஓரங்கட்டுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் நேருவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் , சமூக வலைதளத்தில் தான் இறந்து விட்டதாக தானே பதிவிட்டது திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாம் எம்.எல்.ஏ சௌந்தர் பாண்டியனிடம் கேட்டபோது.. நான் தான் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். மேலும் விரிவாக பேச விரும்பவில்லை என ABP NADU செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேகமாக தெரிவித்தார்


“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி - அமைச்சர் நேரு இடையே மோதல்...

அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரும் விசுவாசியா செயல்பட்டு வந்தவர் பழனியாண்டி ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எல்ஏ பழனியாண்டி நடத்தி வந்த கல்வாரியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த செய்தி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முறைகேடில் ஈடுபட்ட பழனியாண்டி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ பழனியாண்டி கூறியது.. நான் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் அமைச்சர் கே.என்.நேரு தான், அவர் தான் அனைத்திற்கும் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் நேருவும், எம்எல்ஏ பழனியாண்டியும் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் அடுத்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கப்படாது ,என உறுதி செய்யப்பட்டு விட்டதாக திருச்சி அறிவாலயம் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். 

திருச்சி என்றாலே திமுகவின் கோட்டையாக திகழ்ந்துவரும் நிலையில் தொடர்ந்து உட்கட்சி பூசல் அதிகரிப்பதால், இவை அனைத்தும் வருகின்ற தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும், அச்சமும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Embed widget