மேலும் அறிய

திருச்சி: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் ஒரு பக்தரிடம் செல்போன் திருட முயன்றதாக ஒருவரை, கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியலூர் மாவட்டம் ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 38) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள சிறை அறையில் போலீசார் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பியில், தனது இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் மாலை 4 மணி வரை முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்லவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.


திருச்சி: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு

இதையடுத்து முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றால் ஒருவர் எப்படி தூக்குப்போட்டு இறக்க முடியும் என்று சந்தேகம் எழுவதாகவும், போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறியதாவது, உயிரிழந்த நபா், பக்தர்களிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக, சமயபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் கழிவறையில் அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


திருச்சி: சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அதன் உண்மை தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி, போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்தால் பாரபட்சமில்லாமல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலீஸ் நிலையம் வரும் நபர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த நபர் மீது கடந்த 2021-ம் ஆண்டு தனது தாயை கொன்றதாக வழக்கு உள்ளது என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget