மேலும் அறிய

‘காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன்; பிழைத்துப் போகட்டும் ‘- அண்ணாமலை

ராகுலும், ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று சொன்னால் தவறாக போய் விடும். வாய்க்கு வந்ததை நான் சொல்ல மாட்டேன் - அண்ணாமலை

கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடை பயணம் மேற்கொண்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம்  கூறுகையில், “தமிழகத்தில், பா.ஜ.க நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால், எதை எதை செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்னைகளுக்கு மக்கள் சார்பாக, நாங்கள் போராடுகிறோம். தமிழகத்தில், பல பகுதிகள் பின் தங்கியிருக்கிறது. இலுப்பூர், தோகைமலை போன்ற சிறு சிறு பகுதி மக்களை, வளர்ச்சி என்பது தொடமலேயே போய் விட்டது. நம்பிக்கையோடு எங்களிடம் வருபவர்களுக்கு, நாங்கள் செய்து கொடுக்கிறோம். போலீஸ் துறையின் கவனம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை, சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. தி.மு.க., ஆட்சியில், தமிழக போலீஸ் துறை, நடுநிலை தவறி விட்டது. பா.ஜ. கட்சிக்காரர்களை கைது செய்வது மட்டுமே தமிழக போலீசின் குறிக்கோளாக உள்ளது” என்றார். 


‘காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன்; பிழைத்துப் போகட்டும் ‘-  அண்ணாமலை

மேலும், ”பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுப்பது தவறாகி விடும். பஸ்சில் மாணவர்கள் தொங்கி சென்றதை பார்த்த பா.ஜ., கட்சியை சேர்ந்த சகோதரி நடந்து கொண்ட விதம் பற்றி விவாதிக்கலாம். அதே சமயம், கேள்வி கேட்டதை தவறு என்று சொல்லமாட்டேன். பஸ் டிரைவரோ, கண்டக்டரோ கண்டு கொள்ளாததால், சமூக அக்கறையால் அவர், மாணவர்களை கண்டித்திருக்கிறார். சாமான்ய மக்களை கைது செய்வதன் மூலம், தமிழக போலீஸ் துறையின் மாண்பு குலைந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி பேசியதை தி.மு.க., மாற்ற முயற்சிக்கிறது. அவர் பேசியதை விட, ஒரு சமுதாயத்தை கேவலமாக, மோசமாக யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்கமாக, அப்படித்தான் பேசுகிறார். ரோட்டில் செல்லும் பொறுக்கி கூட, அந்த மாதிரி பேச மாட்டான். தி.மு.க.,வின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால், அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாமல், ஆர்.எஸ்.பாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.


‘காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பெண் என்பதால் விட்டு வைக்கிறேன்; பிழைத்துப் போகட்டும் ‘-  அண்ணாமலை

மேலும், ”நாகலாந்து மக்கள் புகார் கொடுத்து, அங்குள்ள போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்வதற்கு முன், தமிழக போலீஸ் கைது செய்ய வேண்டும். அவரது பேச்சில், கவர்னரையும், என்னையும் தவறாக பேசியிருப்பார். தி.மு.க.,வினர் பேசுவதை பற்றியெல்லாம், நான் கண்டுகொள்வதில்லை. பொது வெளியில் ஒரு கேள்வி கேட்கும் போது, அவதூறாக பதில் சொல்லலாம், என்று அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். டில்லியில் இருந்து அரசியல் செய்யும் ஜோதிமணி போன்றவர்களை மதித்து, அவர் மீது வழக்கு போட்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பா.ஜ.க தினமும் கூட்டம் கூட்டுவது போல், காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்ட முடியுமா? அரசியல் கட்சியினர் போகாத ஊர்களுக்கு எல்லாம் சென்று கூட்டம் போடுகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்த கொண்டர்கள், பா.ஜ.,வுக்கு வந்து விட்டதால், அங்கு தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர். வேலை இல்லாததால் தான், ஜோதிமணி அப்படி பேசியிருக்கிறார். பெண்கள் மீது கண்ணியம் கட்டும் நான், தரம் குறைந்த விமர்சனம் செய்யும் ஜோதிமணியை பற்றி தவறாக பேச விரும்ப வில்லை. ராகுலும், ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று சொன்னால் தவறாக போய் விடும். வாய்க்கு வந்ததை நான் சொல்ல மாட்டேன். கர்நாடகா தேர்தலின் போது, ஜோதிமணிக்கு சிவக்குமார் தான் பணம் அனுப்பினார். அதற்கான ஆதாரம் உள்ளது. தேவைப்பட்டால் தருவேன். பெங்களூருவில் போலீஸ் அதிகாரியாக இருந்த எனக்கும், ஜோதிமணி யாரிடம் இருந்த பணத்தை வாங்கி வந்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியும். பெண் என்பதால் விட்டு வைக்கிறேன்; பிழைத்துப் போகட்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget