மேலும் அறிய

திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

ராமேசுவரத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தலைமை செயலக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் அர்பிந்குமார் (வயது 42). இவர் திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22662) ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நள்ளிரவு 1.15 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து, பின்னர் 1.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதே ரயிலில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராமலிங்க அடிகளார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த ரயில் விருத்தாசலம் அருகே சென்றபோது டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இருக்கையில் அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.


திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து, அர்பிந்குமார் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே போலீசிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரயில்வே போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் நிருபர்களிடம் கூறும்போது, சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ் 10 பெட்டியில் 8-வது இருக்கையில் இருக்க வேண்டிய கிருஷ்ணமூர்த்தி என்ற பயணி குடிபோதையில் தனது உடைமைகளை இருக்கையில் வைத்துவிட்டு, ரயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக படுத்து தூங்காதீர்கள் என கூறினேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, திடீரென கன்னத்தில் அறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்துப் பூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என்றார். அவர் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோதும், பேட்டி கொடுக்கும்போதும் அழுதுகொண்டே இருந்தார். 


திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

இந்த நிலையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறும்போது, "எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இங்கு மொழி பிரச்சினையில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. ஆனால் இந்த விஷயத்தில் அவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்" என்றார். இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் மீது தாக்குதல் நடத்திய கிருஷ்ணமூர்த்தியை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget