மேலும் அறிய

மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் மகன் அருள்நேருவிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள், உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு எட்டியதால் மக்கள் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை பொறுத்தவரை திருத்தி என்றாலே திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது பரவலாக கருத்து உள்ளது. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் நிற்கலாமா,வேண்டாமா என்பதை திருச்சியில் தான் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக  ஆட்சியை பிடித்தது ஆகையால் திருச்சி எப்போதுமே திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும் என்பதில் அனைவரும் நம்பிக்கையுடன் இருகிறார்கள். தற்போது திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என இரண்டு பேரும் மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். 

குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 சட்டமன்ற தொகுதியையும் முழுமையாக திமுக கைப்பற்றி திருச்சியை தனது கோட்டையாக மாற்றி உள்ளது. 


மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற இலக்கை நோக்கி திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும், பெயர்களையும் அறிவிக்க உள்ளனர். குறிப்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின், மகன் அருண் நேரு இந்த தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆகையால் கடந்த சில மாதங்களாக அருண் நேரு மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 


மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

இந்நிலையில் திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என் அருண் நேரு ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார் அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தங்கள் ஏரியாவில் பாதாள சாக்கடை மற்றும் ரோடு அமைத்து தர வேண்டுமென கே.என் அருண் நேரு விடம் கோரிக்கையை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அருண் நேரு கோரிக்கையை முன் வைத்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  இன்று அந்த பகுதியில் பாதாள சாக்கடை சரி செய்யும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்..எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலை அமைத்து தர, வேண்டி அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு விடம் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் பாதாள சாக்கடை மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது பாதி பணிகள் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் அருண் நேரு அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget