மேலும் அறிய

மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் மகன் அருள்நேருவிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள், உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு எட்டியதால் மக்கள் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை பொறுத்தவரை திருத்தி என்றாலே திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது பரவலாக கருத்து உள்ளது. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் நிற்கலாமா,வேண்டாமா என்பதை திருச்சியில் தான் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக  ஆட்சியை பிடித்தது ஆகையால் திருச்சி எப்போதுமே திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும் என்பதில் அனைவரும் நம்பிக்கையுடன் இருகிறார்கள். தற்போது திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என இரண்டு பேரும் மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். 

குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 சட்டமன்ற தொகுதியையும் முழுமையாக திமுக கைப்பற்றி திருச்சியை தனது கோட்டையாக மாற்றி உள்ளது. 


மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற இலக்கை நோக்கி திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும், பெயர்களையும் அறிவிக்க உள்ளனர். குறிப்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின், மகன் அருண் நேரு இந்த தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆகையால் கடந்த சில மாதங்களாக அருண் நேரு மக்கள் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 


மக்கள் வைத்த கோரிக்கை: உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் - குஷியில் பொதுமக்கள்

இந்நிலையில் திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என் அருண் நேரு ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார் அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தங்கள் ஏரியாவில் பாதாள சாக்கடை மற்றும் ரோடு அமைத்து தர வேண்டுமென கே.என் அருண் நேரு விடம் கோரிக்கையை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அருண் நேரு கோரிக்கையை முன் வைத்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  இன்று அந்த பகுதியில் பாதாள சாக்கடை சரி செய்யும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்..எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலை அமைத்து தர, வேண்டி அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு விடம் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் பாதாள சாக்கடை மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது பாதி பணிகள் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்வு கண்ட அமைச்சரின் மகன் அருண் நேரு அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.