மேலும் அறிய

அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூர்- திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.

அரியலூரில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் 3 முதல் 4 டன் வரையிலான குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் அரியலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டி வைக்கப்படுவதால், பன்றி, ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உணவை தேடி வருகின்றன. இதனால் குவியலாக கொட்டி வைக்கப்படும் குப்பைகள் கால்நடைகளால் சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், காற்று வீசும் நேரத்தில் சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு இந்த குப்பைகள் குறிப்பாக பாலித்தீன் பைகள் அடித்து செல்லப்படுகிறது. சில நேரங்களில் குப்பைகள் தீப்பற்றி எரியும் போது அவ்வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.


அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூரை அடுத்த கீழப்பழுவூரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கான கிடங்குகள் இருந்தும் அங்கு குப்பைகள் முறையாக எடுத்து செல்லப்படுவது இல்லை. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் அரியலூர்- திருச்சி சாலையில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரியலூர்- திருச்சி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பழுவூரில் மறுசுழற்சி செய்யும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்காக கிடங்கு ஏற்படுத்தப்பட்டாலும் அங்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. நகரின் அருகிலேயே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து அரியலூர் நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பிட்ட இந்த பகுதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும், நகரில் வாகனங்களில் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நாய், பன்றி உள்ளிட்டவைகளும் இங்கு வீசப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 


அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

மேலும், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கொட்டி மூடலாம். இதனால் சுரங்கம் மூடப்படுவதுடன், குப்பைகளும் அப்புறப்படுத்தப்படும். இனிவரும் காலங்களில் இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, அரியலூர்- திருச்சி சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பயோ மைனிங் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget