மேலும் அறிய

அரியலூர்: திடீர் விபத்து: பற்றி எரிந்த பேருந்து: பயணிகளின் நிலை என்ன?

விக்கிரமங்கலம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட 11 பேர் காயமடைந்தனர். மேலும், மின்மாற்றி மீது மோதியதால் பஸ் தீப்பிடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் கும்பகோணத்திற்கு அரசு புறநகர் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தாலாட்டு குப்பத்தை  சேர்ந்த டிரைவர் தனசாமி (வயது 50) ஓட்டி சென்றார். கண்டக்டராக அணிக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (35) பணியாற்றினார். விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே பஸ் சென்றபோது தனசாமி அங்கிருந்த வளைவு பகுதியில் பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது அரியலூரில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்டு ஆலைக்கு காரைக்காலில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிரே வந்தது.

இந்தநிலையில் எதிரே வந்த லாரியானது அரசு பஸ் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், அருகே இருந்த மின்மாற்றி மீது மோதி நின்றது. இதில் அரசு பஸ் சேதம் அடைந்ததுடன், முன்புறமும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி மற்றும் அரசு பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.


அரியலூர்: திடீர் விபத்து: பற்றி எரிந்த பேருந்து: பயணிகளின் நிலை என்ன?

பின்னர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் தனசாமி, கண்டக்டர் ராஜேஷ், பயணிகளான பாக்கியா (20), மங்கையர்கரசி (29), சூர்யா (24), தனம் (50), ராசாமணி (55), பெரியசாமி (65), மணிமேகலை (50), பரமேஸ்வரி (42), 10 மாத குழந்தை பரணிதரன் ஆகிய 11 பேர் காயமடைந்தனர். இதில் டிரைவர் தனசாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தடை செய்யப்பட்ட நேரங்களில் லாரிகள் இயக்கப்படுவதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகளை அந்த வழியாக இயக்கக்கூடாது எனவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த விக்கிரமங்கலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைதொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த 11 பேரும் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ராஜசேகரனை (37) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் டாக்டர்களிடம் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget