மேலும் அறிய

அரியலூர்: கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த நோயால் கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமால், துலாரங்குறிச்சி, இடையார், சூரியமணல், கல்லாங்குளம், வாணத்திைரயான்பட்டிணம், காடுவெட்டங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், கீழமைக்கால்பெட்டி, பாண்டிபஜார், சுத்தமல்லி, உல்லியகுடி, வெண்மான்கொண்டான், தத்தனூர், மனகெதி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து தங்களின் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பருவ நிலை மாற்றத்தினால் மாடுகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இந்த மாட்டு அம்மை ஆரம்பத்தில் கொசு கடி, ஈ கடி போல் தெரிகிறது. பின்னர் ஒரு வாரத்தில் உடம்பு முழுவதும் சின்ன கட்டிகள் மற்றும் காலில் பெரிய கட்டிகள் தோன்றி மாடுகள் மேயமுடியாமலும், நடந்து செல்லமுடியாமலும் அவதிப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.


அரியலூர்: கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் அதிர்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “உதாரணமாக  4 மாடுகளில் 2 மாடுகளுக்கு அம்மை நோய் வந்ததால் நான் ரொம்ப சிரமப்பட்டேன். மாட்டின் உடம்பு முழுவதும் கட்டிகள் மற்றும் வீக்கம் இருந்தது. உடனே கால்நடை மருத்துவரை அணுகி விவரத்தை சொல்லி தடுப்பூசி போட்டேன். அதன் பிறகு இயற்கை முறையில் வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தேன். பிறகு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. மேலும் எங்கள் ஊரில் உள்ள விவசாயிகளின் மாடுகளுக்கு அம்மை நோய் வந்து மாடுகள் கஷ்டப்படுவதை நேரில் பார்த்து வருகிறோம். அதனால்  மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் ஒரு விவசாயி தனது  4 மாடுகளையும் விற்றுவிட்டார். அம்மை நோய் முடிந்த பிறகு மாடுகள் வாங்கி கொள்ளலாம் என்று கூறினார். பொதுவாக இந்த நோயை ஆரம்பத்திலேயே விவசாயிகள், கால்நடை வளர்பவர்கள் கண்டு பிடித்து தடுப்பூசி மற்றும் இயற்கை முறையில் மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் சரியாகிவிடுகிறது. இந்த மாட்டம்மை நோயை ஆரம்பத்தில் கண்டு பிடிக்காத விவசாயிகளின் மாடுகள் மற்றும் கன்றுகள் இறந்து விடுகின்றன” என சோகத்துடன் தெரிவித்தனர்.


அரியலூர்: கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் அதிர்ச்சி

மேலும், “அம்மை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி விட்டோம். அதனால்  எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டது. பணம் இருந்ததால் உடனே தடுப்பூசி செலுத்திவிட்டோம். வசதி இல்லாத ஏழை விவசாயிகள் அவர்கள் மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் அவர்களால் தடுப்பூசி செலுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி போடுதல் வேண்டும், ஒரு சில ஊராட்சியில் தடுப்பூசி முகாம் போடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை தாக்கும் பெரியஅம்மை, மாட்டு அம்மை, இதனை சேர்ந்த தோல் கழலை நோய் உள்ளிட்ட நோய்களை தடுத்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget