மேலும் அறிய

அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு ஆலையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பட்டாசு ஆலையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல்நாயகி என்பவர் பெயரில் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.


அரியலூர் :  வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது!  மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

மேலும், தையல் நாயகியின் கணவர் ஆறுமுகம் இந்த பட்டாசு ஆலையை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆய்வின்போது நாயகனைபிரியாள் செம்புலியப்பன்,பாவாடைராயன் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டிலிருந்து 2 பேர் சென்றதை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 92 மூட்டைகள் வெடிபொருட்களும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அதே வீட்டில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இதனைதொடர்ந்து அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி ஆறுமுகம் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Chennai Central Tower:இனி இதான் சென்னையின் அடையாளம்! 350 கோடியில் 27 மாடியில் வருகிறது சென்ட்ரல் டவர்!
Chennai Central Tower:இனி இதான் சென்னையின் அடையாளம்! 350 கோடியில் 27 மாடியில் வருகிறது சென்ட்ரல் டவர்!
TNTET 2025: ஆசிரியர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; மார்ச் 6 - 9ல் டெட் மாநில தகுதித் தேர்வு!  
TNTET 2025: ஆசிரியர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; மார்ச் 6 - 9ல் டெட் மாநில தகுதித் தேர்வு!  
"காதல் எனும் முடிவிலி" காலமெல்லாம் காதல் நீடிக்க இதுவே போதும்! ஒரு காதல் பார்வை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Chennai Central Tower:இனி இதான் சென்னையின் அடையாளம்! 350 கோடியில் 27 மாடியில் வருகிறது சென்ட்ரல் டவர்!
Chennai Central Tower:இனி இதான் சென்னையின் அடையாளம்! 350 கோடியில் 27 மாடியில் வருகிறது சென்ட்ரல் டவர்!
TNTET 2025: ஆசிரியர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; மார்ச் 6 - 9ல் டெட் மாநில தகுதித் தேர்வு!  
TNTET 2025: ஆசிரியர்களே.. எல்லோரும் எதிர்பார்த்த அறிவிப்பு; மார்ச் 6 - 9ல் டெட் மாநில தகுதித் தேர்வு!  
"காதல் எனும் முடிவிலி" காலமெல்லாம் காதல் நீடிக்க இதுவே போதும்! ஒரு காதல் பார்வை!
Modi's Rhyming Tweet: மகா...மிகா...மெகா... ரைமிங்கில் ட்வீட் செய்து அசத்திய மோடி...எதை பற்றி தெரியுமா.?
மகா...மிகா...மெகா... ரைமிங்கில் ட்வீட் செய்து அசத்திய மோடி...எதை பற்றி தெரியுமா.?
திமுகவை கடுமையாக தாக்கி கிழித்து தொங்கவிட்ட விசிக பிரமுகர் - 2026இல் திமுக காலி என சபதம்
திமுகவை கடுமையாக தாக்கி கிழித்து தொங்கவிட்ட விசிக பிரமுகர் - 2026இல் திமுக காலி என சபதம்
TN Race for MP Seat: வைகோ Out..கமல் In..தேமுதிகவில் சுதீஷா, விஜய பிரபாகரனா.? மாநிலங்களவை MP ஆகப்போவது யார்.?
வைகோ Out..கமல் In..தேமுதிகவில் சுதீஷா, விஜய பிரபாகரனா.? மாநிலங்களவை MP ஆகப்போவது யார்.?
அதானி குறித்து கேட்கப்பட்ட கேள்வி! ஆடிப்போன மோடி! செய்தியாளர் சந்திப்பை கிழித்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்!
அதானி குறித்து கேட்கப்பட்ட கேள்வி! ஆடிப்போன மோடி! செய்தியாளர் சந்திப்பை கிழித்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.