மேலும் அறிய

அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு ஆலையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பட்டாசு ஆலையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல்நாயகி என்பவர் பெயரில் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.


அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

மேலும், தையல் நாயகியின் கணவர் ஆறுமுகம் இந்த பட்டாசு ஆலையை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆய்வின்போது நாயகனைபிரியாள் செம்புலியப்பன்,பாவாடைராயன் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டிலிருந்து 2 பேர் சென்றதை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 92 மூட்டைகள் வெடிபொருட்களும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அதே வீட்டில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இதனைதொடர்ந்து அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி ஆறுமுகம் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Embed widget