மேலும் அறிய

அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு ஆலையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பட்டாசு ஆலையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல்நாயகி என்பவர் பெயரில் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.


அரியலூர் :  வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது!  மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

மேலும், தையல் நாயகியின் கணவர் ஆறுமுகம் இந்த பட்டாசு ஆலையை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆய்வின்போது நாயகனைபிரியாள் செம்புலியப்பன்,பாவாடைராயன் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டிலிருந்து 2 பேர் சென்றதை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 92 மூட்டைகள் வெடிபொருட்களும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அதே வீட்டில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இதனைதொடர்ந்து அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி ஆறுமுகம் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget