மேலும் அறிய

அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு ஆலையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பட்டாசு ஆலையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல்நாயகி என்பவர் பெயரில் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.


அரியலூர் : வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது! மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

மேலும், தையல் நாயகியின் கணவர் ஆறுமுகம் இந்த பட்டாசு ஆலையை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆய்வின்போது நாயகனைபிரியாள் செம்புலியப்பன்,பாவாடைராயன் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டிலிருந்து 2 பேர் சென்றதை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 92 மூட்டைகள் வெடிபொருட்களும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அதே வீட்டில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இதனைதொடர்ந்து அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி ஆறுமுகம் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget