மேலும் அறிய

திருச்சி: 31 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழா... நடுவழியில் தேர் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு

31 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி காப்புக்கட்டப்பட்டது. 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் பொங்கல் வைத்து, இரவில் குதிரை வாகனத்தில் செல்லியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் காலை 11.30 மணிக்கு தேர் புறப்பாடும், கிடா வெட்டுதலும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செல்லியம்மன் கோவிலில் இருந்து அனைத்து தரப்பு பக்தர்களும் தேரை வடம் பிடித்து பொதுச்சாவடி வரை இழுத்தனர். பின்னர் பொதுச்சாவடியில் இருந்து ஒரு சமூகத்தை சேர்ந்த மண்டி வரை அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று, மீண்டும் பொதுச்சாவடிக்கு தேரை இழுத்து வந்தனர். பின்னர் பொதுச்சாவடியில் இருந்து முருகன் கோவில் வரை மற்றொரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். வேறொரு சமூகத்தை சேர்ந்த மக்களின் மண்டிக்கு 20 மீட்டர் தூரத்தில் தேர் இழுத்துவரப்பட்டபோது, அங்கிருந்து மண்டி வரை அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுத்துச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தேரை இழுத்துச்செல்ல, ஏற்கனவே தேரை இழுத்து வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சினையால் தேர் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 


திருச்சி: 31 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழா... நடுவழியில் தேர்  நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு

இதையடுத்து 2 சமூகத்தை சேர்ந்தவர்களுடன் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குந்தலிங்கம், லால்குடி துணை சூப்பிரண்டு சீதாராமன், ஜீயபுரம் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன், லால்குடி தாசில்தார் சிஸிலினாசுகந்தி, அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சுமூகமான தீர்வு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கூடுதல் சூப்பிரண்டு குந்தலிங்கம் தலைமையிலான போலீசார், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு செல்லியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் மதியம் 2.15 மணிக்கு நிறுத்தப்பட்ட தேர் சுமார் 2¼ மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு கோவிலுக்கு இழுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 31 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட செல்லியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் அதிக அளவில் பாதுக்காபு பணியில் ஈடுபட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget