மேலும் அறிய

ஜெயங்கொண்டம்: ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து: நள்ளிரவில் பரபரப்பு...

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் சேமிப்பு கணக்கு மூலம் இந்த வங்கியில் பணம் செலுத்தியும், வைப்பு நிதியாகவும் முதலீடு செய்துள்ளனர். மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதனால் இந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. தினமும் இந்த வங்கிக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வங்கி பணிகள் முடிந்து மாலை 5 மணி அளவில் வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பிடித்து வங்கியின் உள்ளிருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வங்கியின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது.

 


ஜெயங்கொண்டம்: ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து: நள்ளிரவில் பரபரப்பு...

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து வங்கியின் உள்ளே இருந்த தீயணைப்பு கருவிகளில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வங்கியில் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து நள்ளிரவு வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் நகை, பணம் என்ன ஆனதோ என்ற அச்சத்தில் சம்பவ இடத்திற்கு வரத்தொடங்கினர். அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்ட ஜெயங்கொண்டம் ஸ்டேட் வங்கியில் பல கோடி மதிப்பிலான பணமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் உள்ளன என கூறப்படுகிறது. அவை பாதுகாப்பாக உள்ளனவா, அவற்றின் கதி என்ன? என்பது முற்றிலும் தீயை அணைத்தபிறகே தெரியவரும் என்று வங்கி அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
CBSE Supplementary Exam: தொடங்கிய முன்பதிவு; 10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Supplementary Exam: தொடங்கிய முன்பதிவு; 10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
klassen Retirement: பேரதிர்ச்சி.. 33 வயசிலே ஓய்வை அறிவித்த கிளாசென்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்
klassen Retirement: பேரதிர்ச்சி.. 33 வயசிலே ஓய்வை அறிவித்த கிளாசென்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்
Embed widget