மேலும் அறிய

Crime: அரியலூரில் 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள்.. பெண்களிடம் 8½ சவரன் நகை திருட்டு - மக்கள் பெரும் அச்சம்

அரியலூர் மாவட்டம் , அடுத்தடுத்து ஒரே இரவில் பல பெண்களிடம் நடைபெற்ற துணிகர சங்கிலி பறிப்பு சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நந்தையன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா(வயது 51). இவர் அசாவீரன்குடிக்காடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அவரது மகள் மற்றொரு அறையில் தூங்கினார்.

வீடுபுகுந்து திருட்டு:

அப்போது நள்ளிரவு 1 மணிக்கு முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்த 2 மர்மநபர்கள் கடப்பாரை மூலம் கதவை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ஆசிரியர் சித்ரா அதிர்ச்சி அடைந்து திருடர்களை உள்ளே வர விடாமல் கதவை பிடித்து தடுத்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் வேகமாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து சித்ராவை கடப்பாரையால் தலையில் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலால் அலறி துடித்து அவர் மயக்கம் அடைந்தார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.


Crime: அரியலூரில் 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள்.. பெண்களிடம்  8½ சவரன் நகை திருட்டு - மக்கள் பெரும் அச்சம்

அடுத்தடுத்து கொள்ளை:

இந்த நிலையில் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தில் சுதா என்பவர் வீட்டிற்கு வந்த விருந்தினரான பெரம்பலூர் மாவட்டம், கீழ உசேன் நகரத்தை சேர்ந்த சுந்தரராஜன் மனைவி ரோஸி(23) என்பவர் நேற்று இரவு தனது கணவருடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகாலையில் வீட்டிற்கு உள்ளே புகுந்த மர்மநபர்கள் 2 பேர் அவர் அணிந்து இருந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உடனே தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

அதேபோல் அதே தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி இந்துமதி(28) வீட்டிற்குள் புகுந்த அதே நபர்கள் இந்துமதி அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். மேலும் சுப்பையன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த வீட்டில் யாரும் இல்லாததால் வெரும் கையுடன் தப்பிச்சென்றனர். நஞ்சைகுடிகாட்டில் மேலும் 4 வீடுகளில் கைவரிசை காட்ட முயற்சி செய்துள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவ இடங்களுக்கு வந்த விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget