மேலும் அறிய

17.50 லட்சம் வரிபாக்கி - புதுக்கோட்டை BSNL அலுவலகத்திற்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்குரியவை வரை செலுத்த வேண்டிய சொத்துவரி 17 லட்சத்து 50 ஆயிரத்து 644 ரூபாயை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருந்துள்ளது

புதுக்கோட்டை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை உள்பட வரிகள் தொடர்பாக நிலுவை தொகை மொத்தம் ரூ.20 கோடி அளவிற்கு உள்ளது. இந்த தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாடகை பாக்கி செலுத்தப்படாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.  புதுக்கோட்டை மேலராஜ வீதி அருகே மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.
 
இந்த கட்டிடத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்குரியவை வரை செலுத்த வேண்டிய சொத்துவரி 17 லட்சத்து 50 ஆயிரத்து 644 ரூபாயை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருந்துள்ளது. இது தொடர்பாக நிலுவை வரி தொகையை செலுத்த கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் நாகராஜன் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கடிதம் அனுப்பிய பின்பும் செலுத்தப்படாததால் தங்களது அலுவலகத்தை ஜப்தி செய்ய நேரிடும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அதன்பின்பும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சொத்துவரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சென்றனர்.
 

17.50 லட்சம் வரிபாக்கி - புதுக்கோட்டை BSNL அலுவலகத்திற்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்
 
பல முறை நோட்டிஸ் அனுப்பியும்  எந்தவிதமான பதில்களும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் சட்டபடி அலுவலகத்தை சீல் வைப்பதாக கூறினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அலுவலகத்தில் உள்ள தொலைதொடர்பு புகார் மையம் அறையை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வளாகத்தில் இருந்த கேபிள் வயர்கள், குழாய்களை பறிமுதல் செய்து லாரிகளில் நகராட்சி அலுவலகம் கொண்டு சென்றனர்.. இதனை தொடர்ந்து சொத்து வரி செலுத்தாத பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவன உயர்அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  சீல் வைக்கப்பட்டது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் கூறுகையில், அரசு அலுவலகமாக இருந்தாலும் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.
 

17.50 லட்சம் வரிபாக்கி - புதுக்கோட்டை BSNL அலுவலகத்திற்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்
 
புதுக்கோட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒரு அறையில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக திருச்சியில் இருந்து பி.எஸ்.என்.எல். உயர்அதிகாரிகள் வந்து நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்கனவே வரி செலுத்தியிருப்பதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மாறிய பின் சொத்து வரி செலுத்தவில்லை என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அறைக்கு வைக்கப்பட்ட சீல் நேற்று மாலை அகற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சொத்து வரியை 3 நாட்களில் செலுத்துவதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் சீல் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget