மேலும் அறிய

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 15 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

புதுக்கோட்டையில் கஞ்சா வழக்கில் 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பியாக வந்திதா பாண்டே பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடந்தால் உடனே பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 15 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்கலாம் அல்லது மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவின் தொலைபேசி எண்ணான 94899-46674 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்காலம். மேலும், புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நகர் பகுதிகளில் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றி திரிந்தால் புகார் அளிக்கலாம். புகார் குறித்து தனிப்படைக்கு தகவல் தெரிவித்து, ரகசிய கண்காணிப்பு நடத்தி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 15 பேர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் போதை ஊசி விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் கஞ்சா வழக்கில் சமீபத்தில் 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 கிலோ வரை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த 12-ந் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா விற்பனைக்கு எதிராக ஆபரேஷன் 3.0 நடவடிக்கையில் தொடர்ந்து தனிப்படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 12-ந் தேதி திருச்சியை சேர்ந்த ரவுடி இளவரசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் திருச்சி, சிவகங்கை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருப்பினும் புதுக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் நோக்கில் 19 ரவுடிகளை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறை  வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர். மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
Embed widget