மேலும் அறிய

திருவாரூர்: அஞ்சலகத்தில் ரூ.70 லட்சம் கையாடல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக கடந்த ஏழு வருடமாக பணிபுரிந்து வருகிறார் அஞ்சலக துறையில் 70 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக சந்தேகத்தின் பெயரில் விசாரணை.

போஸ்ட் மாஸ்டர் 70 லட்ச ரூபாய் பணம் கையாடல் செய்த விவகாரம். அஞ்சலக அதிகாரிகள் மற்றும் கந்துவட்டி கும்பல் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.
 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தகுடி கம்மாளர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையன். இவரது இரண்டாவது மகன் வினோத். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திற்குட்பட்ட உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக கடந்த ஏழு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வினோத் அஞ்சலக துறையில் 70 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
 

திருவாரூர்: அஞ்சலகத்தில் ரூ.70 லட்சம் கையாடல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை
 
இந்த நிலையில் நேற்று மதுபானத்தில் விஷம் கலந்து குடித்த வினோத் தனது சாவிற்கு உயர் அதிகாரிகள் காரணம் என்றும் அதே போன்று வட்டிக்கு பணம் வாங்கியதில் அதிக வட்டி வசூலித்த இருவர் காரணம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார். 
 
இதுகுறித்து வினோத்தின் தந்தை கருப்பையன் வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி தங்களது வீட்டிற்கு வந்த அஞ்சலக அதிகாரிகள் தற்போது மறு கணக்கெடுப்பு செய்தோம். அதில் 40 லட்சம் தான் குறைகிறது என்றும் மேற்படி பணம் சம்பந்தமாக யார் கேட்டாலும் கையாடல் செய்த பணத்தை ஒத்துக் கொள் பின்பு நாம் அதை சரி செய்து கொள்ளலாம் என்று மூன்று அஞ்சலக அதிகாரிகள் கூறியதாகவும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அஞ்சலக அதிகாரிகள் தனது மகனுக்கு வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்ததாகவும் மேலும் மூன்று தவணையாக 1.75 லட்சம் ரூபாய் பணம் வாங்கி சென்றதாகவும் இதனால் அவன் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 

திருவாரூர்: அஞ்சலகத்தில் ரூ.70 லட்சம் கையாடல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை
 
மேலும் இதேபோன்று உடையாளூரை சேர்ந்த சைமன்ராஜ் மற்றும் சாலமன் என்பவர்களிடம் தனது மகன் நான்கு பைசா வட்டி விதத்தில் 14 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி இருப்பதும் அவர்களும் என் மகனை மிரட்டி உள்ளதாகவும் எங்களிடம் என் மகன் தெரிவித்திருந்த நிலையில் 5 வருடமாக வினோத் வட்டி கட்டி இருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் தெரிவித்து இருந்தான். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த எனது மகனை கடந்த 31 ஆம் தேதி வலங்கைமான் அஞ்சலகத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி மிரட்டி உள்ளார்கள் மேலும் அடித்துள்ளார்கள். இந்த நிகழ்வினை தொடர்ந்து வீட்டிற்கு வரும் வழியில் எனது மகன் வினோத் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் அங்கு சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து வலங்கைமான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
திருட்டு அச்சம் அதிகரிப்பு... ராக்கின்ஸ் சாலையில் உடனடியாக தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Embed widget