மேலும் அறிய

கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்

கர்ப்பிணி பெண்ணிற்கான நிகழ்ச்சி 5ம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் 2 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்ணின் 5 மாத மருந்து கொடுக்கும் நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாளின் ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார்.இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவரது வீட்டில் ஐந்துக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் உறவினர்கள் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உணவருந்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சர்க்கரை பொங்கல் ஆகிய ஐந்து வகை சாதங்களுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த ஐந்து வகை சாதங்கள் மாரியம்மாளின் தாயார் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது. சிக்கன் பிரியாணி புளிவலத்தில் உள்ள அல்நூர் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் ஹோட்டல் ஆகிய கடைகளில் வாங்கப்பட்டுள்ளது. இதில் அல்நூர் கேட்டரிங் சர்வீசில் 40 பிரியாணியும் பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் எட்டு பிரியாணியும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் உணவு அருந்திய 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு கடந்த ஆறாம் தேதி 9 நபர்களும் ஏழாம் தேதி பத்து நபர்களும் என மொத்தம் 19 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேளுக்குடியை சேர்ந்த 24 வயதான செல்வ முருகன் என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பிரியாணி கடைகளில் ஆய்வு நடத்தி உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 


கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்ணிற்கான இந்த சுப நிகழ்ச்சி ஐந்தாம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை என்றும் மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக ஆறாம் தேதி சிகிச்சைக்கு வந்த செல்வமுருகன் (24)  என்ற இளைஞர் ஒரு நாள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே பாதிப்புகள் அதிகரித்து இருந்ததால் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் இறப்புக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை  என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம். அந்த இளைஞர் சிகிச்சைக்கு வந்தபோதே ரத்த அழுத்தம் அதிக அளவு இருந்தது. அவருக்கு தேவையான  சிகிச்சைகளை, அதற்குரிய மருத்துவர்கள் இருந்து வழங்கினார்கள். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக பாதித்திருந்ததால் அவரது உடல் சிகிச்சையை ஏற்க வில்லை. எனவே அந்த இளைஞருக்கு உரிய சிகிச்சைகள் அழைக்கப்படவில்லை என்கின்ற தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைப்பு செய்திகள்

பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget