மேலும் அறிய

பஞ்சமி நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் கொடுங்க - தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

பஞ்சமி நிலத்தை அடமானம் வைக்க தடை இல்லா சான்று கோரி விண்ணப்பித்தும் தடையில்லா சான்று வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி, வந்தவாசி, போளூர், செங்கம், கீழ்பென்னாத்தூர், தானிப்படி, செய்யார் உள்ளிட்ட பகுதியில் இருந்து  தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதற்கு  தடையில்லா சான்றிதழ் வழங்ககோரி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தடையில்லா சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி 

இந்த விசாரணையில் தண்டராம்பட்டு வட்டம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் சில மாதங்களாக உள்ளேன். எனக்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லை, இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். பின்னர் எனக்கு சொந்தமாக தன்னுடைய கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலத்தை எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த நபருக்கு அடமானம் வைத்து பணம் பெற்று உடல்நிலை பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையில்லா சான்று வேண்டுமென விண்ணப்பித்துள்ளேன். கடந்த ஆறு மாதங்கள் ஆகியும் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, மேலும் என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது வருகிறது.

பஞ்சமி நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு 

இதனால் என்னசெய்வது என்று தெரியவில்லை, அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நானும் என்னுடைய மனைவியும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றோம் என்று கூறினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி கீழே கொட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க அவர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் சென்று மனுவை அளித்தனர் இதற்கு அவர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: உண்மைய சொல்வது குற்றமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Share Market: பங்குச் சந்தை புதிய உச்சம் -  சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளையும்,  நிஃப்டி 24,200 புள்ளிகளையும் நெருங்கியது
Share Market: பங்குச் சந்தை புதிய உச்சம் - சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 24,200 புள்ளிகளையும் நெருங்கியது
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Embed widget