மேலும் அறிய

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த போதிலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், மன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாக இருந்த போதிலும், மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீரை வழங்கி வருகிறோம். குடிநீர் பிரச்னை இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.


தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதேபோல் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.


தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை ரூ.25.57 கோடியில் சீரமைப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் உள்ளிட்ட மொத்தம் 14 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேயர் பதிலளித்தார். அதிமுக கொறடா மந்திரமூர்த்தி பேசும்போது, காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, பண்ணை பசுமை காய்கறி அங்காடி அல்லது உழவர் சந்தை மூலம் 60 வார்டுகளிலும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனிமய மாதா பேராலய தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியாகும் வண்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

இதற்கு பதிலளித்து மேயர் பேசும்போது, பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. பேராலய பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 இடங்களில் குடிநீர் தொட்டி, 150 தூய்மை பணியாளர்கள், நகரும் கழிப்பறை வசதி, அந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக பரமாரிக்க கூடுதல் பணியாளர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உணவுக் கழகம் மத்திய அரசு நிறுவனமாகும். அதில் இருந்து வண்டுகள் வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget