மேலும் அறிய

Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு

’’பின்னால் நின்ற சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் இருந்து பிளேடை எடுத்து கையை அறுத்து தங்க நகைகள் ரொக்கப் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது’’

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவர் சன்னதி அருகே சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தரிடம் 36 சவரன்  தங்க நகை மற்றும்  40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் பின்னால் இருந்து பிளேடால் பையை அறுத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 
                                Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு
 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும்  நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இன்று  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகரைச்  சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் கணேசன் (76) தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்பத்துடன் வெளியூர் செல்வதால் பாதுபாப்பு கருதி வீட்டில் இருந்த 36 பவுன் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை காரைக்குடியில் இருந்து கிளம்பி  மாலை திருச்செந்தூர் வந்துள்ளார்.                           
 
 
திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கி விட்டு நேற்று காலை  9.30 மணியளவில் அவர் கொண்டு வந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றள்ளார். கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சென்ற அவர் மூலவர்,  சண்முகர் சன்னதியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்க கொடிமரம் அருகே வந்தபோது கைப்பையை பார்த்துள்ளார். அப்போது  கைப்பையில் ஓரத்தில் பிளேடால் வெட்டி அதனுள்ளே இருந்த 36 பவுன் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்
                            Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு
 
இந்த நிலையில் கணேசன் மகா மண்டபத்தில் மூலவர் சன்னதி அருகே தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது பின்னால் நின்ற சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் இருந்து பிளேடை எடுத்து கையை அறுத்து தங்க நகைகள் ரொக்கப் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் பணம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                Watch Video: கஷ்டம்னு கோயிலுக்கு வந்த பக்தருக்கு வந்த கஷ்டம் - வரிசையில் நின்ற போது 36 சவரன் நகை திருட்டு
 
நேற்று திருச்செந்தூர் கோயிலில் அதிகளவு பக்தர்கள் இல்லாததும் கொள்ளையனுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர் இவர்களது குடும்பத்தை தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுப்பட்டாரா, யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget