மேலும் அறிய

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி..! சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்து..!

”தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி விபத்தால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்து அங்கிருந்த அனைவரையும் நிம்மதி பெருமூச்சில் ஆழ்த்தியது..”

தமிழகம் - கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக கேரளா எல்லைப்பகுதியான  எஸ் வளைவு பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எஸ் வளைவு தண்டவாள பகுதியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் லாரி முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், அந்த  நேரத்தில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. தண்டவாள பகுதியில் லாரியானது விழுந்து கிடந்த நிலையில் அந்த பகுதியில் ரயில் வந்ததால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் சூழல் உருவானது. அதனை பார்த்த புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா என்ற நபர் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடி சென்று சற்று தொலைவில் வைத்து லைட் அடித்து சிக்னல் காண்பித்தார். அதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார்.  இதனால் மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.


இதனிடையே லாரி விபத்து குறித்து புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தென்காசி ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி விபத்தில் சிக்கி லாரி டிரைவர் உயிரிழந்ததை அறிந்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக லாரி கிளீனர் விபத்தின் போது கீழே குதித்து உயிர் தப்பியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி ஓட்டுநர் முக்கூடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 34) என்பதும், தூத்துக்குடிக்கு இருந்து பிளைவுட் ஏற்றி வந்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.

மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தண்டவாளப் பகுதியில் லாரியானது விபத்துக்குள்ளாகுள்ள நிலையில் அதனை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் கிடந்த லாரி அகற்றப்பட்டது.. இதன் காரணமாக, செங்கோட்டையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயிலும், சென்னையிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற ரயிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்னர்  புறப்பட்டு சென்றது.. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் குறைந்த வேகத்தில் போக்குவரத்து இயக்கப்பட்டு  சீர் செய்யப்பட்டன. தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி விபத்தால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்து அங்கிருந்த அனைவரையும் நிம்மதி பெருமூச்சில் ஆழ்த்தியது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்!  என்ன நடந்தது?
Coimbatore: சென்னை - கோவை சென்ற ஆம்னி பேருந்தில் இளம்பெண் மர்ம மரணம்! என்ன நடந்தது?
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Vijayakanth: “விஜயகாந்த்தை மிஸ் பண்றேன்.. அவர் மதுரை வீரன்” - வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!
“விஜயகாந்த்தை மிஸ் பண்றேன்.. அவர் மதுரை வீரன்” - வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்!
Breaking News LIVE: டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Breaking News LIVE: டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் - அரவிந்த் கெஜ்ரிவால்
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Embed widget