மேலும் அறிய

வடமாநிலத்தவர் அதிகம் வரும் ராமநாதபுரத்தில் தவிக்கும் ரயில் பயணிகள்

உரிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளை அறிந்துகொள்ளும் வகையில் கோச் இன்டிகேட்டர்கள் எரிய துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் எரியாத கோச் இன்டிகேட் உள்ளிட்ட அடிப்படை வசதி குறைவு காரணமாக இரவு நேரங்களில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் மாவட்ட தலைநகர் மட்டுமின்றி வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. ராமநாதபுரத்தை சுற்றிலும் பல முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. குறிப்பாக திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி, தேவிபட்டினம் போன்ற இடங்களுக்கு தினமும் வடமாநில பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். ஆனால், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி சரிவர செய்யப்படவில்லை.குடிநீர் வழங்கும் குழாய்களில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை.ரயில் குறித்த அறிவிப்பிற்கான டிஸ்பிளே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படவில்லை. டிஸ்பிளே (கோச்பொசிசன்) வசதியும் இல்லை.


வடமாநிலத்தவர் அதிகம் வரும் ராமநாதபுரத்தில் தவிக்கும் ரயில் பயணிகள்

இரண்டாவது பிளாட்பார்ம் முழுமையாக அமைக்கப்படவில்லை. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் ரயில் இன்ஜின் மாற்ற கூடுதல் தண்டவாள வசதி இல்லை.மேலும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அயோத்தி எக்ஸ்பிரஸ், வாரணாசி எக்ஸ்பிரஸ்,அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில்களை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்துவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் ரெயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு ரெயில்கள் வாராந்திர சேவையாக இயக்கப் பட்டு வருகிறது. கீழக்கரை, பெரியபட்டிணம், ஏர்வாடி, பனைக்குளம், புதுவலசை, தேவிபட்டினம், ஆர்.எஸ், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சவுதி, மலேசியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். 


வடமாநிலத்தவர் அதிகம் வரும் ராமநாதபுரத்தில் தவிக்கும் ரயில் பயணிகள்

இவர்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி நகரங்களுக்கு ரெயில் மூலம் சென்று அதன்பின்னர் விமானம் மூலம் அயல்நாடுகளுக்கு செல்கின்றனர். ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் ரெயில் நிலையம் வழியாக  பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு போதுமான வசதிகள் ரெயில்நிலையத்தில் இல்லை. இதில் குறிப்பிடத்தக்கது பழுதான கோச் இன்டிகேட்டர்தான். ரெயில் நிலையத்தில்  பல மாதங்களாக இவை எரியாமல் உள்ளது.  பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் முன்பதிவு ரெயில் பெட்டிகள் எங்கு நிற்கும் என அறிந்துகொள்ளும் கோச் இன்டிக்கேட்டர் போர்டுகளும் எரிவதில்லை.


வடமாநிலத்தவர் அதிகம் வரும் ராமநாதபுரத்தில் தவிக்கும் ரயில் பயணிகள்

இதனால் ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவு பெட்டிகளை இரவு நேரங்களில் பயணிகள் தேடுவதற்கு சிரமம் அடைகின்றனர். இதனால் நேரம் வீணாகிறது. பரபரப்பு பதட்டத்துடன் முன்பதிவு பெட்டிகளை தேடுவதும். இந்த நேரத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் ஆசாமிகள் தங்களது கைவரிசைகளை காட்டும் சம்பவங்களும் தொடர் கதையாக நடந்து  வருகின்றன. பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் செய்வதற்கு  நேரமில்லாமல் பணத்தை இழந்து வேதனையுடன் செல்கின்றனர். ரெயில்வே நிர்வாகம் இது தொடர்பாக உரிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளை அறிந்துகொள்ளும் வகையில் கோச் இன்டிகேட்டர்கள் எரிய துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Madurai Hc ; குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம் - மதுரை அமர்வு உத்தரவு !
Madurai Hc ; குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம் - மதுரை அமர்வு உத்தரவு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget