மேலும் அறிய

‘மருதமரம் பேசுகிறேன் காலமெல்லாம் நிழலை கொடுத்தேன்.. மருத்துவ பலனை கொடுத்தேன்.. என்னையும் வெட்டிட்டாங்க’

மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது

ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரம் சிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்டது, மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.


‘மருதமரம் பேசுகிறேன் காலமெல்லாம் நிழலை கொடுத்தேன்.. மருத்துவ பலனை கொடுத்தேன்..  என்னையும் வெட்டிட்டாங்க’

மருத மரத்தின் இலைகள்,துவர்ப்பு தன்மைமிக்க மருதமரத்தின் பட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துமிக்க டான்னிக், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள காரணத்தால், மருதம் பட்டைகளே, அதிக அளவில் மூலிகை மருந்தாக, பயன்படுகின்றன.


‘மருதமரம் பேசுகிறேன் காலமெல்லாம் நிழலை கொடுத்தேன்.. மருத்துவ பலனை கொடுத்தேன்..  என்னையும் வெட்டிட்டாங்க’

மருதம் பட்டைகள் வியாதி எதிர்ப்பு சக்தி அதிகம் நிரம்பியவை, இதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது. இன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.இவ்வளவும் என்னால் இயன்றளவு உங்களுக்கு செய்து இருப்பேன் என நம்புகிறேன்.


‘மருதமரம் பேசுகிறேன் காலமெல்லாம் நிழலை கொடுத்தேன்.. மருத்துவ பலனை கொடுத்தேன்..  என்னையும் வெட்டிட்டாங்க’

முன்னெல்லாம் சுவாமி நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் மருத மரங்கள் நிறைந்து இருப்போம், ஒவ்வொரு சித்திரை திருவிழாவில் சுவாமி தீர்த்தவாரி செல்லும் போது பொதுமக்கள் மரத்தின் நிழலிலே பல கிலோ மீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்ல ஏதுவாக இருந்தேன்.. அப்போது நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் இருக்கும் ஏராளமான மருத மரங்களின் நிழலிலே பல கிலோமீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்ல ஏதுவா இருந்தோம்,  பக்தர்களுக்கு இயற்கையோடு , நிழலும் தரக்கூடிய வகையில் இந்த மருத மரங்கள் காட்சி தந்தோம். இந்த வழியா நீங்க வரும் போது இருபுறமும் நின்று நிழலாய், குளிர்ச்சியாய் உங்களை அழைத்து சென்றோம்.


‘மருதமரம் பேசுகிறேன் காலமெல்லாம் நிழலை கொடுத்தேன்.. மருத்துவ பலனை கொடுத்தேன்..  என்னையும் வெட்டிட்டாங்க’

முதலில் விரிவாக ஆரம்பித்த சாலையின் போது இருபுறமும் இருந்த நாங்கள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டோம். நூறாக நின்றோம், பத்தானோம். தற்போது, இங்கு ஒரே ஒரு மருதமரமாக நான் மட்டுமே இருக்கிறேன், மின் பராமரிப்பு என அவ்வப்போது என்னை சிறிய அளவில் வெட்டினார்கள், மீண்டும் தளிர்த்தேன்.ஆனால் இப்போ சாலை விரிவாக்கப்பணி, மின்பாதைக்கு தடங்கலாக இருப்பதாக கூறி என் சிறகுகளை மீண்டும் வெட்டிட்டாங்க... மீண்டும் தளிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு... நகரமயமாக்கலுக்கு சாலை விரிவாக்கம் அவசியம் தான், எங்களையும் வாழவிடுங்க என்கிறோம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Embed widget