Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
Chennai Power Cut(09-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளசரவாக்கம்
- விருகம்பாக்கம்
- ஆழ்வார்திரு நகர்
- சுரேஷ் நகர்
- கைக்கன் குப்பம்
- விஓசி தெரு
- பாரதி காலனி
- ஆற்காடு சாலை
- கிழக்கு காமகோடி நகர்
- திருவள்ளுவர் தெரு
- எஸ்.வி.எஸ் நகர்
- சவுத்ரி நகர்
- இந்திரா நகர்
- மசூதி தெரு
- பெரியார் நகர்
- மீனாட்சியம்மன் நகர்
- லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
போரூர்
- நண்பர்கள் நகர்
- ராஜேஸ்வரி நகர்
- வைத்தி நகர்
- பாரி கார்டன்
- ராயல் சிட்டி
- மலயம்பாக்கம்
- எஸ்பி அவென்யூ
- தேவதாஸ் நகர்
- சுமித்ரா நகர்
- பிள்ளையார் கோவில் தெரு
- ரஹமத் நகர்
- சக்தி நகர்
- எல்கேபி நகர்
- வசந்தபுரி
- ருக்மணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















