மேலும் அறிய

பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே தொடரும் மோதல்..! உணவுக்காக அடித்துக்கொண்டார்களா???

பாளை சிறையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதிகள் 4 பேரும் சிறைச்சாலை மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டையில்  மத்திய சிறைச்சாலையில் உள்ளது. இங்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமுதாய ரீதியாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கைதி காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி பழனி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். 

இந்த நிலையில் நேற்று உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்ற கைதிக்கும் சக கைதியான முக்கூடல் அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ராஜகோபால், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற கைதிகளுக்கும் இடையே உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது யார் முதலில் வாங்குவது என்ற அடிப்படையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் சிறை வார்டன் உடனடியாக உணவருந்தும் கூடத்திற்கு சென்று கைதிகளை விலக்கி விட்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நெல்லை பாளையங்கோட்டை சிறைத்துறை கண்காணிப்பாளர் முனியாண்டி உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அந்த அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதிகள் 4 பேரும் சிறைச்சாலை மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைதிகள் பேரின்பராஜ், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ராஜகோபால் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முத்துமனோ என்ற இளைஞர் சிறையில் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல  தூத்துக்குடியில் 2019 ஆம் ஆண்டு ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விசாரணை கைதிகள் மருதுவேல், பாலசுப்பிரமணியன், சுந்தர மூர்த்தி, ஆகியோர் ஒன்றாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த பிப் மாதம் காலை மூன்று பேருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு மருதவேல் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நெஞ்சுப் பகுதியில்  காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதும் கைதிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்படும் மோதலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget