மேலும் அறிய

அகத்திய மலையில் இன்று முதல் தொடங்கியது யானைகள் கணக்கெடுப்பு பணி

அம்பாசமுத்திரம் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 23 ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, நீலாம்பூர், ஆனைமலை என மொத்தம் நான்கு யானைகள் காப்பகம் உள்ளன. இதனைத் தொடர்ந்து  தமிழ்நாட்டில் 5 வது யானைகள் காப்பகமாக கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தன்று நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை அறிவித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற அகத்திய மலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2761 யானைகள் இருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள 11,947 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகள் சரணாலயமாக அறிவித்த நிலையில் இன்று முதல் அகத்திய மலைப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 

அதன்படி அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 23 ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தலைமையில் கடந்த திங்கள்கிழமையன்று அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்களுக்கு முண்டந்துறை பயிற்சி கூட்டரங்கில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணியை இன்று தொடங்கினர்.

பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள் முண்டந்துறை பகுதியில் 15 பிரிவுகளாகவும், பாபநாசம் பகுதியில் 4 பிரிவுகளாகவும், கடையம் பகுதியில் 9 பிரிவுகளாகவும்ம், அம்பாசமுத்திரம் பகுதியில் 9 பிரிவுகளாகவும் என மொத்தம் 37 குழுவினர் என 90 க்கும் மேற்பட்டோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.. கணக்கெடுப்பை பொறுத்தவரை மூன்று நாட்களும் மூன்று வகைகளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தெரிவித்தார், இது குறித்து  அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

* முதல் நாள் முழுவதும் யானைகள் சரணாலயம் முழுவதும் நேரடியாக யானைகளைக் கண்டு அதன் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

* இரண்டாவது நாள் 37 குழுவிலும் அவரவர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஒரு வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் வரும் யானைகளின் சாணம், எச்சம், என யானையின் பழக்க வழக்கங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கணக்கெடுக்கப்படும்.

* மூன்றாவது நாள் முழுவதும் யானை அதிகம் பயன்படுத்தும் நீர் நிலைகளை கண்டறிந்து அதற்குள் வரும் யானைகளை கணக்கெடுப்பது என தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெறுகிறது என்றார். மேலும்  தமிழகத்திற்கு முதுமலை காப்பகத்தின் அதிகாரி இதற்கு கண்காணிப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தமிழகத்தில் நடைபெறும் யானைகள் கணக்கெடுப்பு முழுவதும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதுமாக கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லையா.? குற்றப்பத்திரிகை ஏற்பு..
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லையா.? குற்றப்பத்திரிகை ஏற்பு..
"என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?" பெண் டிஜிபி குற்றச்சாட்டில் கோபத்தில் EPS!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லையா.? குற்றப்பத்திரிகை ஏற்பு..
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லையா.? குற்றப்பத்திரிகை ஏற்பு..
"என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?" பெண் டிஜிபி குற்றச்சாட்டில் கோபத்தில் EPS!
ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Thaipusam 2025: முருக பக்தர்களே! தைப்பூசத் திருவிழாவிற்கு ரெடியா? கொடியேற்றம் எப்போது தெரியுமா?
Thaipusam 2025: முருக பக்தர்களே! தைப்பூசத் திருவிழாவிற்கு ரெடியா? கொடியேற்றம் எப்போது தெரியுமா?
Praggnanandhaa Vs Gukesh: குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரக்ஞானந்தா... சர்வதேச செஸ் தொடரை வென்று அசத்தல்...
குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரக்ஞானந்தா... சர்வதேச செஸ் தொடரை வென்று அசத்தல்...
Embed widget