மேலும் அறிய

அகத்திய மலையில் இன்று முதல் தொடங்கியது யானைகள் கணக்கெடுப்பு பணி

அம்பாசமுத்திரம் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 23 ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, நீலாம்பூர், ஆனைமலை என மொத்தம் நான்கு யானைகள் காப்பகம் உள்ளன. இதனைத் தொடர்ந்து  தமிழ்நாட்டில் 5 வது யானைகள் காப்பகமாக கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தன்று நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை அறிவித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற அகத்திய மலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2761 யானைகள் இருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள 11,947 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை யானைகள் சரணாலயமாக அறிவித்த நிலையில் இன்று முதல் அகத்திய மலைப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 

அதன்படி அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 23 ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தலைமையில் கடந்த திங்கள்கிழமையன்று அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்களுக்கு முண்டந்துறை பயிற்சி கூட்டரங்கில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட வனப் பணியாளர்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணியை இன்று தொடங்கினர்.

பயிற்சி பெற்ற வனப் பணியாளர்கள் முண்டந்துறை பகுதியில் 15 பிரிவுகளாகவும், பாபநாசம் பகுதியில் 4 பிரிவுகளாகவும், கடையம் பகுதியில் 9 பிரிவுகளாகவும்ம், அம்பாசமுத்திரம் பகுதியில் 9 பிரிவுகளாகவும் என மொத்தம் 37 குழுவினர் என 90 க்கும் மேற்பட்டோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.. கணக்கெடுப்பை பொறுத்தவரை மூன்று நாட்களும் மூன்று வகைகளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளரான இளையராஜா தெரிவித்தார், இது குறித்து  அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது,

* முதல் நாள் முழுவதும் யானைகள் சரணாலயம் முழுவதும் நேரடியாக யானைகளைக் கண்டு அதன் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

* இரண்டாவது நாள் 37 குழுவிலும் அவரவர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஒரு வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் வரும் யானைகளின் சாணம், எச்சம், என யானையின் பழக்க வழக்கங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கணக்கெடுக்கப்படும்.

* மூன்றாவது நாள் முழுவதும் யானை அதிகம் பயன்படுத்தும் நீர் நிலைகளை கண்டறிந்து அதற்குள் வரும் யானைகளை கணக்கெடுப்பது என தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெறுகிறது என்றார். மேலும்  தமிழகத்திற்கு முதுமலை காப்பகத்தின் அதிகாரி இதற்கு கண்காணிப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தமிழகத்தில் நடைபெறும் யானைகள் கணக்கெடுப்பு முழுவதும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதுமாக கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Embed widget