மேலும் அறிய

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் ! பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்

தினமும் இதுபோன்ற சூழலை சந்திக்கும் தங்களது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு நலன்கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தினமும் வெளியில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக இவர்கள் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளுக்கு வந்து தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும், அதோடு கல்லூரிகளுக்கும் இங்கு வந்து தான் பேருந்து ஏறி செல்ல வேண்டும். இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் வரும் அரசு பேருந்தில் போதிய இடவசதி இல்லாததால் தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்ல வேண்டியுள்ள சூழல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 


ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் ! பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்

வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தங்களது பிள்ளைகளை ஏற்றிவிட்டு செல்லும் பெற்றோர்களும் பிள்ளைகளை பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு அச்சத்துடனே வீட்டிற்கு செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். தினமும் இது போன்ற சூழலை சந்திக்கும் தங்களது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த நிலையில் இன்று  வாசல் வரை கூட்டமாக பேருந்து தெற்கு பாப்பாங்குளம் பகுதிக்கு வந்த போது மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாத  சூழல் உருவானது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் அப்பேருந்தை சிறைபிடித்து பேருந்தை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து  கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் இன்று பரபரப்பான சூழல் உருவானது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget