மேலும் அறிய

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. 1979, 1980,1982 இந்த வரிசையில் முதல் மூன்று அனல் மின் உற்பத்தி அலகுகளும் தொடங்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளை கடந்து, அதன் ஆயுட்காலம் முடிந்தும் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. 1991,92 இந்த வரிசையில் 4-வது மற்றும் 5-வது மின் உற்பத்தி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 30 ஆண்டுகளை கடந்து இந்த யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து பிரிவுகளும் அவ்வப்போது ஏற்படும் கொதிகலன் பழுது, நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மின் உற்பத்தி நிறுத்தப்படும். மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் நிலை உள்ளது



தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி எந்திரங்களை இயக்கி வருகின்றனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அனல்மின்நிலையங்களில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகையால் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

இதுகுறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் கூறும் போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுக்க முடியும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணியை முடிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் மாசு இல்லாத அனல்மின்நிலையமாக மாறும் என்று கூறினார்.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையம் அவ்வப்போது பழுது ஏற்படுவதும், சீரமைக்கப்பட்டு இயக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலை உள்ளது, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது ரூ.500 கோடி மதிப்பீட்டில் கந்தக டை ஆக்சைட் வெளியேற்றத்தை தடுக்க தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். அனல்மின் நிலையங்களை தவிர்த்து அரசு மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget