மேலும் அறிய

தூத்துக்குடி: தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் - மாவட்ட ஆட்சியர்

உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து ஆத்தூர் பேரூராட்சி செயல் தலைவர் வேல்முருகன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி அவதூறாக பேசியதால் விஷம் குடித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி: தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் - மாவட்ட ஆட்சியர்

உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (56). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் (மேஸ்திரி) பணியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பணி மூப்பு அடிப்படையில் தனக்கு தூய்மை பணி மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கக் கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவரின் உறவினரும் (மாமியார்), பேரூராட்சித் முன்னாள் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.


தூத்துக்குடி: தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் - மாவட்ட ஆட்சியர்

அப்போது சுடலைமாடன் தூய்மை பணி மேற்பார்வையாளர் பணியில் தொடர்ந்து நீடிக்க அவரிடம் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுடலைமாடன் நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து சுடலைமாடன் குடும்பத்தினர், அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி: தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் - மாவட்ட ஆட்சியர்

தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸாப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பதவியை ரத்து செய்ய வேண்டும். சுடலைமாடன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுடலைமாடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், தென்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, வட்டாட்சியர் சுவாமிநாதன், டிஎஸ்பி வசந்தராஜ், உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மாலை வரை இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.


தூத்துக்குடி: தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம் - மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து ஆத்தூர் பேரூராட்சி செயல் தலைவர் வேல்முருகன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உயிரிழந்த சுடலைமாடன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம், அவரது மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்படும் எனவும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள், தற்போது உள்ள பேரூராட்சி தலைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். முதல்கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையை சுடலைமாடன் குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார். இதனை தொடர்ந்து உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்த அவர்கள் இன்று உடலை பெற்று கொள்கின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget