மேலும் அறிய

Thoothukudi: மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - நான்கரை வயது சிறுவன் உயிரிழப்பு!

மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவன் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவன் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அனவரதநல்லூர் பகுதியில், பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 மாணவ மாணவிகள் காயமடைந்த நிலையில், செல்வ நவீன் என்ற நான்கரை வயது மாணவன் உயிரிழந்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்போன் ஆட்டோவின் உட்புறத்தில் விழுந்ததை எடுக்க குனிந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பலியான மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ, மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர். விபத்து குறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.



Thoothukudi: மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து -  நான்கரை வயது சிறுவன் உயிரிழப்பு!

ஆட்டோ ஒட்டுனர்கள் மிக கவனமுடன் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது, ஆட்டோகளை இயக்க வேண்டும், பெற்றோர்கள் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றிவிட்டால் கடமை முடிந்ததாக இருக்ககூடாது, பெரும்பாலும் பள்ளி இறுதி நேரத்தில் பிள்ளைகளை அவசர அவசரமாக தயார் செய்வதும், உரிய நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற அதிவேகமும் விபத்திற்கு காரணமாக உள்ளது,  அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளை ஏற்றி செல்வதற்கு காரணமாகும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தபிறகு அரசு விழித்து கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதும், சில காலத்திற்கு பின் அவை காற்றில் பறப்பதும் வாடிக்கையாகிவிட்டது  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Thoothukudi: மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து -  நான்கரை வயது சிறுவன் உயிரிழப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த  2 ரயில்கள்..!  அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்..! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
Embed widget