மேலும் அறிய

’நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன்’ : வெளியாகும் ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதை..

'முன்னாள் அமைச்சர் படுக்கைக்கு அழைத்தார். சிவசங்கர் ஐ.ஏ.எஸ் எனக்கு தாலிகட்டினார்' ஸ்வப்னா சுரேசின் சுயசரிதை நாளை வெளியீடு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கு 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் பார்சலை எடுக்கச் சென்ற ஸரித், பார்சலை விடுவிக்க முயன்ற கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் இருந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், சந்தீப் நாயர் என பலர் கைது செய்யப்பட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 98 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஒன்றேகால் ஆண்டுகள் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜாமினில் இருந்து வெளியே வந்தார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையே ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 'அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆனையானு' என்ற தலைப்பில் 176 பக்கம் கொண்ட சுயசரிதை புத்தகம் ஒன்றை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அந்த புத்தகத்தில், "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த யு.ஏ.இ தூதரக பார்சலை விடுவிக்க உதவ வேண்டும் என ஸ்வப்னா சுரேஷ் உதவி கேட்டார். சுங்கத்துறை விஷயத்தில் நான் தலையிடமுடியாது என கூறிவிட்டேன். தங்கம் கடத்தல் வழக்கில் எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. ஸ்வப்னாவின் கல்வித்தகுதியை பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் வேலைக்கு சேர்த்ததால் என்னை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார்கள். 

’நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன்’ : வெளியாகும் ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதை..
இந்த நிலையில் சிவசங்கரைப்போன்றே தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார் ஸ்வப்னா. 'சதியுடே பத்ம வியூகம்' என்ற அந்த புத்தகத்தை திருச்சூர் கரண்ட் புத்தக நிலையம் வரும் நாளை வெளியிட உள்ளது. அந்த புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஸ்வப்னா எழுதியுள்ள சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா தனது புத்தகத்தில், "ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் ஒரு கோயிலில் வைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். அப்போது எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' எனச்சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன். என்.ஐ.ஏ விசாரணையின்போதும் என் கழுத்தில் சிவசங்கர் கட்டிய மஞ்சள் தாலி கயிறு இருந்தது.
 
கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர் என்னை பலமுறை எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அவர் தன்னை ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அதை விசாரணை ஏஜென்சிகளிடமும் ஒப்படைத்துள்ளேன். பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம் எனக் கூறினார்கள். அதனால்தான், விசாரணை அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள் எனவும், அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை' என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன்" என புத்தகத்தில் கூறியுள்ளார்.
 
அதே சமயம் யார் மீதும் ஸ்வப்னா பாலியல் புகார் கூறவில்லை. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மோசடியில் ஈடுபட்டது, முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிரான தகவல்களை அந்த புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் ஸ்வப்னாவின் சுயசரிதை கேரள அரசியலில் மீண்டும் சூறாவளியை கிளப்பும் என்கிறார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Mamallapuram New Bus Stand: மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மாமல்லபுரம் பேருந்து நிலையம்: 40 வருட கனவு நனவாகிறதா? ஜூலைக்குள் திறப்பு! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Embed widget