மேலும் அறிய

அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில்,  இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

கொள்ளை வழக்கில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த இரண்டு  முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில் அந்த  இருவரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  நடந்த உள் நாட்டு போரின் போது இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த நிலையில் தற்போது இலங்கை நாட்டில் உள்ள பலரும் மீண்டும் அகதியாக வந்து கொண்டுள்ளனர். இலங்கையில் தொடர்ந்து  நிலவும் பொருளாதார நெருக்கடி காரணகாக அங்கு  அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளதை அடுத்து  அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி தமிழகத்துக்கு தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை  இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர  காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம்போல இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் வருவோரை நடைமுறை விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில்  அனுமதிப்பது போன்று இந்த எட்டு பேரையும்  அகதிகளாக பதிவு செய்து தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அகதிகளாக வந்த எட்டு பேரில் இரண்டு பேரை கொள்ளை வழக்கில் இலங்கை போலீசார் தேடி வந்துள்ளனர். அந்நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க   அகதிகளாக   தமிழகம் வந்திருப்பது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

 


அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

இதில் அகதிகள் போர்வையில் வந்த கிருபாகரன், சந்திரகுமார் ஆகிய இரண்டு நபர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு நகை கடையின் உரிமையாளரை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கானது அந்நாட்டு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்து வரும்  நிலையில் அங்கிருந்து தப்பி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்தது அந்நாட்டு போலீசாரால் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்ய இலங்கை போலீசார்  தமிழக காவல்துறையின் உதவியை நாடினர்.  அவர்களின் வழக்கு விபரம் க்யூ ப்ராஞ்ச் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும்  மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் அகதிகளாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து,   முகாமில் இருந்த அவர்கள் இருவரையும்  கைது செய்த சட்டம் ஒழுங்கு போலீசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வருவோர்களை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் இந்திய அரசு செய்து வருகிறது. ஆனால்,இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இலங்கையில் பெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு அகதியை  போன்று அப்பாவிகளாக வந்து தமிழகத்திற்குள்  ஊடுருவியுள்ளது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதே வழியை பின்பற்றி பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இனி அகதிகளாக வருவோர் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இருவரும் விசாரணைக்கு பின்னர் இரண்டு நபர்களையும் அவருடைய சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்புகிறார்களா?  அல்லது இங்கேயே வழக்கு ஏதும் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்களா என்று போலீஸாரின் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget