மேலும் அறிய

அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில்,  இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

கொள்ளை வழக்கில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த இரண்டு  முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில் அந்த  இருவரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  நடந்த உள் நாட்டு போரின் போது இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த நிலையில் தற்போது இலங்கை நாட்டில் உள்ள பலரும் மீண்டும் அகதியாக வந்து கொண்டுள்ளனர். இலங்கையில் தொடர்ந்து  நிலவும் பொருளாதார நெருக்கடி காரணகாக அங்கு  அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளதை அடுத்து  அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி தமிழகத்துக்கு தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை  இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர  காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம்போல இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் வருவோரை நடைமுறை விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில்  அனுமதிப்பது போன்று இந்த எட்டு பேரையும்  அகதிகளாக பதிவு செய்து தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அகதிகளாக வந்த எட்டு பேரில் இரண்டு பேரை கொள்ளை வழக்கில் இலங்கை போலீசார் தேடி வந்துள்ளனர். அந்நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க   அகதிகளாக   தமிழகம் வந்திருப்பது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

 


அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

இதில் அகதிகள் போர்வையில் வந்த கிருபாகரன், சந்திரகுமார் ஆகிய இரண்டு நபர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு நகை கடையின் உரிமையாளரை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கானது அந்நாட்டு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்து வரும்  நிலையில் அங்கிருந்து தப்பி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்தது அந்நாட்டு போலீசாரால் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்ய இலங்கை போலீசார்  தமிழக காவல்துறையின் உதவியை நாடினர்.  அவர்களின் வழக்கு விபரம் க்யூ ப்ராஞ்ச் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும்  மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் அகதிகளாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து,   முகாமில் இருந்த அவர்கள் இருவரையும்  கைது செய்த சட்டம் ஒழுங்கு போலீசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வருவோர்களை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் இந்திய அரசு செய்து வருகிறது. ஆனால்,இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இலங்கையில் பெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு அகதியை  போன்று அப்பாவிகளாக வந்து தமிழகத்திற்குள்  ஊடுருவியுள்ளது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதே வழியை பின்பற்றி பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இனி அகதிகளாக வருவோர் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இருவரும் விசாரணைக்கு பின்னர் இரண்டு நபர்களையும் அவருடைய சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்புகிறார்களா?  அல்லது இங்கேயே வழக்கு ஏதும் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்களா என்று போலீஸாரின் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget