மேலும் அறிய

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..

படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயம்.

ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்துவிட்டு வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயம்.
 
 கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 60 நாட்கள் தடை காலம் முடிந்து நேற்று மீன்பிடி மீனவர்கள் சென்றனர். இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக அவர்கள் கரை திரும்ப அரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அந்த வகையில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை திரும்பிய விசை படகு ஒன்று ராட்சத அலையில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது படகில் இருந்த மூவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒரு மீனவர் மாயமான நிலையில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..
 
குளச்சல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முன்தினம் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள் , இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பை கேரளா அரசு முன் கூட்டியே அறிவித்ததுபோல தமிழக அரசும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி கொடுத்ததால் இந்த அறிவிப்பு பயன்படாது என மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் காலதாலகமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய ஆபத்துகளை உயிரிழப்புகளை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம் மீண்டும் தமிழக அரசு அதேபோன்று தவறுகளையே செய்து வருவதாக மீனவ அமைப்புகள் கடும் குற்றச்சாட்டு உள்ளனர் ஆழ் கடலில் உள்ள மீனவர்களை இந்த அரசு எப்படி எச்சரிக்கை தகவலை கொண்டு சேர்க்கும்? அவர்களை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளை மீனவ அமைப்புகள் அரசுக்கு முன் வைத்துள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான கொல்லங்கோடு, பொழியூர் கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்.
 

கன்னியாகுமரி : வானிலை எச்சரிக்கை காரணமாக கரை திரும்பிய விசைப்படகு.. ராட்சத அலையில் சிக்கிய விபரீதம்..
 
தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை நீடித்து வரும் நிலையில் அரபி கடலிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குமரி மேற்கு கடற்கரை பகுதியான அரபி கடலில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் ,கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகளில் அவ்வப்போது கடல் நீர் சூலும் நிலை ஏற்படும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான கொல்லம் கோடு, பொழியூர், பூவார்,போன்ற பகுதிகளில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தன, தொடர்ந்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர், அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் மாற்று இடங்களில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget