மேலும் அறிய

விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

தூக்காணங்குருவிகளை நீர்நிலைகளுக்கு அருகிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த மரக்கிளைகளிலும் கூடுகளை அமைத்துக் கொண்டு, இரை, குடிநீர் என அனைத்தும் கிடைக்கும் வகையில் இருப்பிடத்தினை அமைத்துக்கொள்ளும்

தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகமாக காணப்படும் குருவி வகை தூக்கணாங்குருவி. இவை கூட்டம் கூட்டமாக கூடுகள் கட்டி வாழும் குணம் கொண்டவை. அதிகளவு வயல் வெளிகள், தானிய பயிர்கள் விளைந்து இருக்கும் விவசாய நிலங்கள் அருகே இருக்கும் மரங்களில் தூக்கணாங்குருவி குடுகளை காணமுடியும்.


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டபடும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது.


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கூட்டம் கூட்டமாக வாழும் இவைகளின் கூட்டத்தில் 20-30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன. தூக்கணங்குருவிகள் இரவில் ஒளி தரும் மின்மினிப்பூச்சிகளை எடுத்து ஈரமான களிமண்ணில் வைத்து தன் கூட்டின் சுவற்றில் ஒட்டிவிடும். இதனால் இரவு கூட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

தூக்காணங்குருவிகளை பொறியாளர்கள் என்று கூறும் அளவிற்கு கூடுகள் கட்டும் அழகு அலாதியனது. பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த மரக்கிளைகளிலும் கூடுகளை அமைப்பிதினை தூக்கணாங்குருவிகள் வழக்கமாக கொண்டுள்ளன. தங்களுக்கான இரை, குடிநீர் என அனைத்து ஒருங்கிணைந்து கிடைக்கும் வகையில் இருப்பிடத்தினை தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்ளும். பாம்பு, காகம் இவற்றிடம் இருந்து தப்பித்து கொள்ளும் வகையிலும் தங்களது இருப்பிடத்தினை இவ்வாறு தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்கின்றன. அதிலும் ஆண் தூக்கணாங்குருவிகள் தான் கூடுகள் அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

விவசாய நிலங்களை சுற்றி இருக்கும் கூடுகள், கீச்,கீச் என தூக்கணாங்குருவி எழுப்பு சத்தங்கள் என ஒரு காலத்தில் பரவி இருந்த நிலையில் தொலைத்து தொடர்புத்துறையின் வளர்ச்சி தூக்கணாங்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. அதிலும் தூக்கணாங்குருவிகள் இனமும் ஒன்று. 


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மானவாரி விவசாயம் அதிகம் என்பதால் எளிதில் தூக்கணாங்குருவிகளை பார்க்க கூடிய காலம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, போதிய மழையின்மை போன்ற காரணங்களால் பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டதால் தூக்கணாங்குருவி கூடுகளை பார்க்க முடியவில்லை. இந்தாண்டு விவசாயம் சற்று அதிகாரித்து உள்ளது. ராபி பருவத்தில் விளாத்திகுளம் பகுதியில் கம்பு, பாசி, சோளம், உளுந்து, மல்லி, மிளகாய், மக்காச்சோளம் என் பயிர்களை விசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் பரவலாக மழை பெய்து வருவால் விளாத்திகுளம் பகுதியில் பச்சை பசேல் என நிலங்கள் காட்சியளிக்கும் நிலை இருப்பதால் மீண்டும் துக்கணாங்குருவிகள் கூடுகளை பல இடங்களில் காணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  


விளாத்திகுளத்தில் களைகட்டும் தூக்கணாங் குருவிகள் - கூடுகள் அமைக்கும் அழகினை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

தானிய பயிர்கள் பயிரிட்டுள்ள நிலங்கள் அருகே இருக்கும் சீமை கருவேலமரங்கள், பனைமரங்களில் தூக்கணாங்குருவிகள் தங்களது கூடுகளை அமைத்து  வருகின்றனர். தூக்கணாங்குருவிகள் கூடுகள் அமைப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள், குழந்தைகள் எல்லோரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
TN Weather Alert: கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Embed widget