மேலும் அறிய

தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மே 5-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் மே 5-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது

சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் -  பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சி  அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் -  பேச்சுவார்த்தையில் உடன்பாடு

போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் என்டிபிஎல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்தவித சுமூக முடிவும் ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்களிள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் திறன் கொண்ட இந்த அனல்மின் நிலையத்தில் குறைந்தபட்ச அளவான 560 முதல் 600 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் அனல்மின் நிலையத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் -  பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை தொழிளாளர் ஆணையர் அருண்குமார் தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன்,  செயலாளர் ரசல், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் என்டிபிஎல் சார்பில் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற என்டிபிஎல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். 


தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் -  பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மே 5-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் மே 5-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தெரிவித்து உள்ளது.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget