மேலும் அறிய

தூத்துக்குடியில் சுனாமியை தடுத்த அலையாத்தி காடுகளில் செயல்படுத்தப்படும் மரம் நடும் திட்டம்

’’2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடலுக்கும், தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்துக்கும் அருகே உள்ள புன்னகாயல், பழையகாயல் பகுதிகளை அரணாக அலையாத்தி காடுகள் இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை’’

தாமிரபரணி முகத்துவாரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வரும் அலையாத்தி காடுகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் படகில் சென்று ஆய்வு 
தூத்துக்குடியில் சுனாமியை தடுத்த அலையாத்தி காடுகளில் செயல்படுத்தப்படும் மரம் நடும் திட்டம்
                                         
 
தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்கள் பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதியில் உள்ளன. இந்த பகுதிகளில் அலையாத்தி காடுகள் சுமார் 800 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த அலையாத்தி காடுகள் சுனாமி மற்றும் கடல் அரிப்பை தடுக்க கூடியது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கூட கடலுக்கும், தாமிரபரணி ஆற்று முகத்துவாரத்துக்கும் அருகில் இருக்கும் புன்னகாயல், பழையகாயல் பகுதிகளை அரணாக அலையாத்தி காடுகள் இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் அலையாத்தி காடுகள்  மீன்களின் இனப்பெருக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது. நண்டு, இறால் போன்றவை அதிக அளவில் வாழும் இடமாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்து உள்ளதுடன்  பறவைகளின் வாழிடமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இந்த அலையாத்தி காடுகளுக்கு வந்து செல்கின்றன.

தூத்துக்குடியில் சுனாமியை தடுத்த அலையாத்தி காடுகளில் செயல்படுத்தப்படும் மரம் நடும் திட்டம்
 
இத்தகைய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்தி காடுகளை பெருக்கும் முயற்சியில் மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அலையாத்தி காடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விதைகளை சேகரிக்கின்றனர். மழை காலங்களில் அலையாத்தி காடுகளில் பூ பூக்கும் அதனை தொடர்ந்து அலையாத்தி விதைகளை சேகரிக்கின்றனர். அந்த விதைகளை முகத்துவாரத்தில் இருந்து சிறிய வாய்க்கால்களை வெட்டி தண்ணீர் கொண்டு சென்று அருகில் உள்ள பகுதிகளில் விதைகளை விதைத்து செடிகளை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் அவினிசியா மெரைனா என்ற அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஹெக்டர் வரை அலையாத்தி காடுகள் மன்னார் வளைகுடா வனத்துறையினரால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் சுனாமியை தடுத்த அலையாத்தி காடுகளில் செயல்படுத்தப்படும் மரம் நடும் திட்டம்
 
இந்த காடு வளர்ப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் ஆகியோர் பழையகாயல் தாமிரபரணி முகத்துவாரத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து படகில் கடலுக்குள் சென்றனர். அங்கிருந்து கரையோரமாக வளர்க்கப்பட்டு வரும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போன்று பைனாகுலர் மூலம் காடுகளில் உள்ள பறவைகளையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அலையாத்தி காடுகளின் பரப்பை அதிகரிக்கவும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget