மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் - விரைவில் திறக்க கோரிக்கை

’’புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் மூடப்பட்டது'’

மத்திய அரசின் சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 975 கோடி செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் 4 நடைமேடைகள் புதுப்பிக்கப்படுவதுடன், கூடுதலாக 2 நடைமேடைகளும் கட்டப்பட்டு உள்ளன.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் - விரைவில் திறக்க கோரிக்கை

அங்கு தரைத்தளம் மற்றும் முதல் தளம் என கடைகள் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே 4 பிளாட்பாரங்களில் இருந்த கடைகளின் மேல் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைத்து கடைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதுதவிர கழிப்பிட வசதிகள், பஸ்கள் வந்து செல்லும் விவரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டு உள்ளன. பஸ் வந்து செல்லும் 2 நடைமேடைகளுக்கு நடுவே அழகிய பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 4 நடைமேடைகள் போக்குவரத்துக்கு தயார் ஆகி விட்டது. மத்திய பகுதியில் இருக்கும் தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு பஸ்கள் நின்று செல்லும் 2 நடைமேடைகள், நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் நடைமேடைகள் மற்றும் அதன் எதிரே அமைக்கப்பட்டுள்ள புதிய நடைமேடைகள் ஆகிய 4 நடைமேடைகளும் தயார் நிலையில் உள்ளது.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் - விரைவில் திறக்க கோரிக்கை

பஸ் நிலையம் நவீன முறையில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை, சென்னை பஸ்கள் செல்லும் நடைமேடை மற்றும் அதன் எதிரே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நடைமேடை ஆகியவை தயார் ஆகிக்கொண்டிருக்கிறது. பஸ்கள் உள்ளே வந்து, வெளியே செல்லும் ரோடு கான்கிரீட் ரோடாக அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அருகில் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே புறநகர் பஸ்களுக்கும், விரைவு பஸ்களுக்கும் தனித்தனியாக 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் விரைவில் aடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்காலிக பேருந்து நிலைய வளாகம் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலைக்கு ஏற்படும். எனவே பயணிகளின் நிலை கருதி புதிய பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக தயார் நிலையில் இருக்கும் 4 பிளாட்பாரங்களை மட்டுமாவது விரைவில் திறந்து பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் - விரைவில் திறக்க கோரிக்கை
 
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தயார் நிலையில் இருக்கும் 4 நடைமேடைகளில் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர். புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் காலியாக கிடந்த இடத்தில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தில் அழகிய புல்தரை அமைக்கப்பட்டு இருப்பதுடன் ராக்கெட்டுகள், டைனோசர் மாதிரிகள் மற்றும் செயற்கை நீரூற்று, வினோத விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. டிஸ்கவரி மையம், புதுமை மையம், ரோபோக்கள் பற்றிய மையம் ஆகிய 3 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நவீன டிஜிட்டல் திரைகளில் பொதுமக்களுக்கு அறிவியல் விந்தைகள் குறித்து விளக்க படம் போட்டு காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் முன்பு விஞ்ஞானிகள் சிலைகளும், அப்துல்கலாம் முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget