![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nellai: நாங்குநேரி அருகே ரயில்வே கேட் அறையை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள்
ஏதேனும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது ரயில்வே துறையை சேதப்படுத்த மர்மநபர்கள் மேற்கொண்டுள்ள சதி திட்டமா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Nellai: நாங்குநேரி அருகே ரயில்வே கேட் அறையை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள் Nellai news Mysterious miscreants tried to set fire to the railway gate room near Nanguneri TNN Nellai: நாங்குநேரி அருகே ரயில்வே கேட் அறையை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/eaa647b2414e5192d7f2e7e77e0beb1c1687450395513109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நெடுங்குளம் ரயில்வே கேட் உள்ளது. அதில் கேட் கீப்பராக விஷ்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். குறிப்பாக நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுவது வழக்கம். நெடுங்குளம், தாழைகுளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில்வே கேட் வழியாக தான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் (22ம்தேதி) அதிகாலை விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு மர்ம நபர்கள் இருவர் கையில் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர். பின் அவர்கள் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த இரண்டு தொலைபேசிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிகிறது. இதனிடையே அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை என்பதை தொடர்ந்து அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.முன்னதாக தப்பியோடிய விஷ்ணு இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த உடன் அங்கு விரைந்த ரயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் எதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டனர். ஏதேனும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது ரயில்வே துறையை சேதப்படுத்த மர்மநபர்கள் மேற்கொண்டுள்ள சதி திட்டமா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)