மேலும் அறிய

அறிவிப்பு ரூ.6 ஆயிரம், கொடுப்பது ஆயிரம் நம்பி ஏமாற்ற வைத்திருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

வெள்ளம் வந்து சென்ற 10 நாட்களில் உடனடியாக எதையும் செய்துவிட முடியாது.  வெள்ள நிவாரணம் கொடுப்பது, சாலைகளை சரிசெய்வது என்பது போன்ற வேலைகள் உள்ளது.

நெல்லையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு முறையான நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மானூர் தாலுகாவில் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும் அதனை வாங்க மறுத்து ரூ.6000 வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க  வந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக  நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சேர்ந்து மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை, மானூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அது தவறான  கருத்தாக, செயலாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள 43 பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என சொன்னதற்கிணங்க ஆட்சியரை சந்திக்க  வந்தேன், அரசாங்கத்திடம் இருந்து அப்படிதான் உத்தரவு வந்துள்ளது என கூறினார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புபடி மானூர் தாலுகாவில் பல கிராமங்களுக்கு 6 ஆயிரம் என அறிவித்துள்ளார், அதற்கான அறிவிப்பு என்னிடம் உள்ளது, ஆனால் அவர்களுக்கு 6 ஆயிரம் கொடுக்காமல் வெறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பது அவர்களை நம்பி ஏமாற்ற வைத்திருக்கும் ஒரு செயலாகும். எனவே ஆட்சியர்  இதனை அரசாங்கத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்து மானூர் தாலுகாவில் உள்ள அனைத்து இடங்களிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 29 ரேசன் கடைகளுக்கு 6 ஆயிரம் அறிவித்து இப்போது அதுவும் இல்லை ஆயிரம் என கொடுக்கின்றனர் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் சரியாக கையாளவில்லையா? அல்லது அதிகாரிகள் சரியாக கையாளவில்லையா  என்பதை தாண்டி அறிவிப்பு உள்ளது. அதன்படி  பணம் கொடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கண்டிப்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வேன், ஏற்கனவே அவரை பார்க்கும் பொழுது சொன்னேன், ஆனால் எழுத்து மூலமாக எதுவும் கொடுக்கவில்லை, நேரடியாக வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வந்துள்ள நிலையில் அது குறித்த கேள்விக்கு, வெள்ளம் வந்து சென்ற 10 நாட்களில் உடனடியாக எதையும் செய்துவிட முடியாது.  வெள்ள நிவாரணம் கொடுப்பது, சாலைகளை சரிசெய்வது என்பது போன்ற வேலைகள் உள்ளது. அதன்பிறகு காலம் தாழ்த்தாமல் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இது குறித்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அழுத்தம் தெரிவித்து நான் பேச இருக்கிறேன் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget