மேலும் அறிய

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாய் காட்சியளித்த கட்டபொம்மன் சிலை அகற்றம்..! போராட்டம் நடத்த முடிவு..!

சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் கொண்டு வைக்கப்பட வேண்டும் இல்லை எனில் வரும் 29ஆம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரான இவரை கௌரவப்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன்  நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என பெயர் சூட்டினார். பின்நாளில் ஏற்பட்ட ஜாதி கலவரம் காரணமாக சமுதாயத் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனினும்  நெல்லை மாவட்ட மக்களிடம்  வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கட்டபொம்மன் கம்பீரமாக கையில் வாளுடன் காட்சி அளிக்கும் முழு உருவ சிலை அமைக்கப்பட்டிருந்தது.

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிலை அங்கு  இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிலையை காணவில்லை. வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சிலை வேறு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கலாம் என்ன மக்கள் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து தற்போது அந்த கட்டிடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் அதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலை மீண்டும் இடம்பெறவில்லை. மாறாக சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பம் கட்ட மறுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி முடிவில் தூக்கு கயிற்றுக்கு தனது உயிரை பறி கொடுத்த வீர வரலாறு கொண்ட கட்டபொம்மன் சிலை அப்புறப்படுத்தப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. 


  
இந்த நிலையில் விடுதலை களம் கட்சி சார்பில் அதன் தலைவர் நாகராஜ் தமிழக முதலமைச்சருக்கு தனி பிரிவிற்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் உடனடியாக கட்டபொம்மன் சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் கொண்டு வைக்கப்பட வேண்டும் இல்லை எனில் வரும் 29ஆம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு அருங்காட்சியகத்தில் உள்ள சிலை மீண்டும் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிறுவப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget