மேலும் அறிய

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாய் காட்சியளித்த கட்டபொம்மன் சிலை அகற்றம்..! போராட்டம் நடத்த முடிவு..!

சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் கொண்டு வைக்கப்பட வேண்டும் இல்லை எனில் வரும் 29ஆம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரான இவரை கௌரவப்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன்  நெல்லை மாவட்டத்திற்கு நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என பெயர் சூட்டினார். பின்நாளில் ஏற்பட்ட ஜாதி கலவரம் காரணமாக சமுதாயத் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனினும்  நெல்லை மாவட்ட மக்களிடம்  வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கட்டபொம்மன் கம்பீரமாக கையில் வாளுடன் காட்சி அளிக்கும் முழு உருவ சிலை அமைக்கப்பட்டிருந்தது.

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிலை அங்கு  இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிலையை காணவில்லை. வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக சிலை வேறு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கலாம் என்ன மக்கள் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து தற்போது அந்த கட்டிடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் அதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலை மீண்டும் இடம்பெறவில்லை. மாறாக சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பம் கட்ட மறுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி முடிவில் தூக்கு கயிற்றுக்கு தனது உயிரை பறி கொடுத்த வீர வரலாறு கொண்ட கட்டபொம்மன் சிலை அப்புறப்படுத்தப்பட்டது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது தொடர்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. 


  
இந்த நிலையில் விடுதலை களம் கட்சி சார்பில் அதன் தலைவர் நாகராஜ் தமிழக முதலமைச்சருக்கு தனி பிரிவிற்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் உடனடியாக கட்டபொம்மன் சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் கொண்டு வைக்கப்பட வேண்டும் இல்லை எனில் வரும் 29ஆம் தேதி  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு அருங்காட்சியகத்தில் உள்ள சிலை மீண்டும் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிறுவப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget