மேலும் அறிய

ஜெயக்குமார் மரண வழக்கு: சிபிசிஐடி ஏடிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் 2வது நாளாக விசாரணை

மேலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள தங்கபாலு, ரூபி மனோகரன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 2 ஆம் தேதி இரவு காணாமல் போன  நிலையில் மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிபிசிஐடி வசம் இவ்வழக்கானது மாறியது. அதன்பின் சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமார் மனைவி, மகன்கள் உள்பட குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சில வாரங்களுக்கு முன்பு நெல்லை வருகை தந்து கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஆய்வு நடத்தி வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் ஜெயக்குமார் மரணத்தின் பின்னணி பெரும் ரகசியமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் ஐஜி அன்பு எஸ்பி முத்தரசி ஆகிய மூன்று பேரும் நேற்று ஒரே நாளில் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கிடந்த குழிக்குள் போலீசார் இறங்கி அளவீடு செய்தனர். பின் தோட்டம் முழுவதும் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் அங்குள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் ஆய்வு செய்ததை தொடர்ந்து ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். ஜெயக்குமாரின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த  நிலையில் நேற்றைய விசாரணையை முடித்த அவர்கள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஐஜி உள்பட சிபிசிஐடி உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு ஜெயக்குமார் வழக்கின் விசாரணை அதிகாரி உலகராணி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்குமூலம் கடிதத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில் தற்போது முதல் நபராக இடம் பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜாவை சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்தராஜா தனது விளக்கத்தை கடிதமாக அளித்துள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் இன்று ஆனத்தராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் வழக்கில் உயரதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் மரண வாக்கு மூலம் கடிதத்தில் இடம் பெற்ற நபரிடம் நடைபெற்று வரும் தொடர் விசாரணை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள கேவி.தங்கபாலு, ரூபி மனோகரன், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget