மேலும் அறிய

ஜெயக்குமார் மரண வழக்கு: சிபிசிஐடி ஏடிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் 2வது நாளாக விசாரணை

மேலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள தங்கபாலு, ரூபி மனோகரன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 2 ஆம் தேதி இரவு காணாமல் போன  நிலையில் மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிபிசிஐடி வசம் இவ்வழக்கானது மாறியது. அதன்பின் சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமார் மனைவி, மகன்கள் உள்பட குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சில வாரங்களுக்கு முன்பு நெல்லை வருகை தந்து கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஆய்வு நடத்தி வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் ஜெயக்குமார் மரணத்தின் பின்னணி பெரும் ரகசியமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் ஐஜி அன்பு எஸ்பி முத்தரசி ஆகிய மூன்று பேரும் நேற்று ஒரே நாளில் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கிடந்த குழிக்குள் போலீசார் இறங்கி அளவீடு செய்தனர். பின் தோட்டம் முழுவதும் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் அங்குள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் ஆய்வு செய்ததை தொடர்ந்து ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர். ஜெயக்குமாரின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்த  நிலையில் நேற்றைய விசாரணையை முடித்த அவர்கள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஐஜி உள்பட சிபிசிஐடி உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு ஜெயக்குமார் வழக்கின் விசாரணை அதிகாரி உலகராணி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்குமூலம் கடிதத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில் தற்போது முதல் நபராக இடம் பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜாவை சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்தராஜா தனது விளக்கத்தை கடிதமாக அளித்துள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் இன்று ஆனத்தராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் வழக்கில் உயரதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் மரண வாக்கு மூலம் கடிதத்தில் இடம் பெற்ற நபரிடம் நடைபெற்று வரும் தொடர் விசாரணை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள கேவி.தங்கபாலு, ரூபி மனோகரன், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அடுத்தடுத்த விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget