மேலும் அறிய

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

’’வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது’’

தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது  நடைபெற்று வரும் நிலையில், பயிர்கள் அனைத்தும்  சில நாட்களில் சூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு வரும் நிலையில் உள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூரை அடுத்த 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை, அம்மன்பேட்டை, மனக்கரம்பை, கண்டியூர், வடகால், கள்ளப்பெரம்பூர், பனவெளி உள்ளிட்ட  பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், உடனடியாக  குறுவை நெற் பயிர்களை கடித்து துண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால், குறுவை சாகுபடி பணி தொடங்கப்பட்டது. ஆனால், வரப்புகளை போதுமான அளவில் சீர் செய்யாமலும்,  எலி வளைகளை உடைத்து  தாய் எலிகளையும், குட்டிகளையும் சேகரித்து அழிக்காமல் விட்டதால், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.  இதனால் எலிகள் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியதால்,  குறுவை சாகுபடி கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது.

இதனையடுத்து எலிகளை கிட்டி வைக்கு பிடிக்க விவசாயிகள் முடிவு செய்து, ஒரத்தநாடு தாலுக்கா உளூரிலுள்ள எலி கிட்டி வைப்பவர்களை அழைத்து வந்து, ஒரு எலியை பிடிக்க 30 ரூபாய் கொடுத்து, சாகுபடி வயலில் வைத்து வருகின்றோம். குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் கதிர்கள் கடித்திருப்பதை வைத்து போதுமான அளவில் கிட்டி வைக்கப்படும். இதில் கிட்டியில் எலி சிக்கினால், அந்த எலி உயிருடன் இருந்தால், உணவுக்காக எடுத்து சென்று விடுவார்கள். இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனை பறவைகள் தின்று விடும்.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35  வரை நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் எலிகள்  தொல்லையால் ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை கிடைப்பதே அரிதாகும். இதனால் செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது.  அதன் பிறகு வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், குறுவை சாகுபடியில் எலிகளின் தொல்லை அதிகமாக  இருப்பதால், உடனடியாக தேவையான ரசாயன உரங்களையும், கிட்டி வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக போதுமான கூலி கொடுத்து, வயல்களில் உள்ள எலிகளை பிடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்தும் பயிரும் நாசமாகும் என்றார்.

தலைப்பு செய்திகள்

MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget