மேலும் அறிய

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

’’வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது’’

தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது  நடைபெற்று வரும் நிலையில், பயிர்கள் அனைத்தும்  சில நாட்களில் சூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு வரும் நிலையில் உள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூரை அடுத்த 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை, அம்மன்பேட்டை, மனக்கரம்பை, கண்டியூர், வடகால், கள்ளப்பெரம்பூர், பனவெளி உள்ளிட்ட  பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், உடனடியாக  குறுவை நெற் பயிர்களை கடித்து துண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால், குறுவை சாகுபடி பணி தொடங்கப்பட்டது. ஆனால், வரப்புகளை போதுமான அளவில் சீர் செய்யாமலும்,  எலி வளைகளை உடைத்து  தாய் எலிகளையும், குட்டிகளையும் சேகரித்து அழிக்காமல் விட்டதால், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.  இதனால் எலிகள் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியதால்,  குறுவை சாகுபடி கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது.

இதனையடுத்து எலிகளை கிட்டி வைக்கு பிடிக்க விவசாயிகள் முடிவு செய்து, ஒரத்தநாடு தாலுக்கா உளூரிலுள்ள எலி கிட்டி வைப்பவர்களை அழைத்து வந்து, ஒரு எலியை பிடிக்க 30 ரூபாய் கொடுத்து, சாகுபடி வயலில் வைத்து வருகின்றோம். குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் கதிர்கள் கடித்திருப்பதை வைத்து போதுமான அளவில் கிட்டி வைக்கப்படும். இதில் கிட்டியில் எலி சிக்கினால், அந்த எலி உயிருடன் இருந்தால், உணவுக்காக எடுத்து சென்று விடுவார்கள். இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனை பறவைகள் தின்று விடும்.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35  வரை நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் எலிகள்  தொல்லையால் ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை கிடைப்பதே அரிதாகும். இதனால் செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது.  அதன் பிறகு வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், குறுவை சாகுபடியில் எலிகளின் தொல்லை அதிகமாக  இருப்பதால், உடனடியாக தேவையான ரசாயன உரங்களையும், கிட்டி வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக போதுமான கூலி கொடுத்து, வயல்களில் உள்ள எலிகளை பிடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்தும் பயிரும் நாசமாகும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget