மேலும் அறிய

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

’’வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது’’

தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது  நடைபெற்று வரும் நிலையில், பயிர்கள் அனைத்தும்  சில நாட்களில் சூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு வரும் நிலையில் உள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூரை அடுத்த 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை, அம்மன்பேட்டை, மனக்கரம்பை, கண்டியூர், வடகால், கள்ளப்பெரம்பூர், பனவெளி உள்ளிட்ட  பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், உடனடியாக  குறுவை நெற் பயிர்களை கடித்து துண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால், குறுவை சாகுபடி பணி தொடங்கப்பட்டது. ஆனால், வரப்புகளை போதுமான அளவில் சீர் செய்யாமலும்,  எலி வளைகளை உடைத்து  தாய் எலிகளையும், குட்டிகளையும் சேகரித்து அழிக்காமல் விட்டதால், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.  இதனால் எலிகள் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியதால்,  குறுவை சாகுபடி கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது.

இதனையடுத்து எலிகளை கிட்டி வைக்கு பிடிக்க விவசாயிகள் முடிவு செய்து, ஒரத்தநாடு தாலுக்கா உளூரிலுள்ள எலி கிட்டி வைப்பவர்களை அழைத்து வந்து, ஒரு எலியை பிடிக்க 30 ரூபாய் கொடுத்து, சாகுபடி வயலில் வைத்து வருகின்றோம். குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் கதிர்கள் கடித்திருப்பதை வைத்து போதுமான அளவில் கிட்டி வைக்கப்படும். இதில் கிட்டியில் எலி சிக்கினால், அந்த எலி உயிருடன் இருந்தால், உணவுக்காக எடுத்து சென்று விடுவார்கள். இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனை பறவைகள் தின்று விடும்.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35  வரை நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் எலிகள்  தொல்லையால் ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை கிடைப்பதே அரிதாகும். இதனால் செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது.  அதன் பிறகு வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், குறுவை சாகுபடியில் எலிகளின் தொல்லை அதிகமாக  இருப்பதால், உடனடியாக தேவையான ரசாயன உரங்களையும், கிட்டி வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக போதுமான கூலி கொடுத்து, வயல்களில் உள்ள எலிகளை பிடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்தும் பயிரும் நாசமாகும் என்றார்.

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Seeman Emotional : ’பெரியப்பா இருக்கேண்டா - இயக்குநர் செழியன் மறைவு | சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
’இயக்குநர் செழியன் மறைவு – சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
E.V. Velu Look Out Notice : எ.வ.வேலு வழக்கில் திடீர் திருப்பம்.! அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
எ.வ.வேலு வழக்கில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
Embed widget