மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் பணியாளர் நியமனத்தில் திமுக தலையீடு: பாஜக தர்ணா!

திமுக நிர்வாகிகள் சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு நியமனத்தில் தலையிட்டதாக புகார் எழுந்தது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்துக்கு முறையான அறிவிப்பு இல்லாமல் ஆளும் திமுக நிர்வாகிகள் தலையீட்டில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

                                   திருச்செந்தூர் கோயில் பணியாளர் நியமனத்தில் திமுக தலையீடு: பாஜக தர்ணா!
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழு நேர அன்னதான திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் சமையல் மாஸ்டர், உதவியாளர்கள், தனியார் காவலாளிகள் மூலம் தற்போது அன்னதான உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் முழு நேர அன்னதான திட்டத்துக்கு கூடுதலாக சமையல் மாஸ்டர், உதவி சமையல் மாஸ்டர், மேற்பார்வையாளர், சப்ளையர் உள்ளிட்ட 60 பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த பணி நியமனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் முறையான எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பத்திரிக்கைகளில் செய்தி மற்றும் விளம்பரம் வெளியிடப்படவில்லை. கோயில் அலுவலக தகவல் பலகையில் அறிவிப்பு ஏதும் ஒட்டப்படவில்லை. ஆளும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தலையிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை, பணம் வாங்கிக் கொண்டு இந்த பணிக்கு நியமனம் செய்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

                                   திருச்செந்தூர் கோயில் பணியாளர் நியமனத்தில் திமுக தலையீடு: பாஜக தர்ணா!
மேலும் இதனை கண்டித்தும், முறையாக அறிவிப்பு செய்து அரசு விதிகள்படி பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் பாஜக மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாள் தலைமையில் அக்கட்சியினர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். போராட்டம் நடத்திய பாஜகவினருடன் கோயில் நிர்வாகம் சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடந்த வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
 
இது தொரடர்பாக தகவல் அறிந்து பாஜக மாவட்ட பொதுசெயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் அங்கு வந்து அவர்களுடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இணை ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி முறையான விளக்கம் அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

                                   திருச்செந்தூர் கோயில் பணியாளர் நியமனத்தில் திமுக தலையீடு: பாஜக தர்ணா!
இந்நிலையில் இணை ஆணையர் குமரதுரை அந்த வழியாக வந்தார். அவரை பாஜகவினர் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதையடுத்து அன்னதான திட்டத்துக்கான பணியாளர் நியமனம் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் பிறகே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இணை ஆணையர் உறுதியளித்தார். அதன்பேரில் பாஜகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget