மேலும் அறிய

சாதி, சமய மோதல்கள் ஏற்படாதவாறு இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வேன் - காவல் ஆணையர் மூர்த்தி பேட்டி

குற்றச் செயல்கள் இல்லாத ஒரு மாநகராகவும்  உருவாக்கும் நிலையை தொடர்ந்து இம்மாநகர காவல்துறை செய்ய  நான் உத்வேகமாக இருப்பேன் என்றார்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய மாநகர காவல் ஆணையாளராக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.  அப்போது நெல்லை மாநகர காவல் துறை சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்பொழுது, வரலாற்று சிறப்பும் புகழும் மிக்க திருநெல்வேலி மாநகரத்தில் காவல் ஆணையாளராக இன்று பொறுப்பேற்பது கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழலில் திருநெல்வேலி   மாநகர மக்கள் பெருமழையால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர், அந்த பெருந்துயர் துடைக்கும் அரசின் பணியில் காவல்துறை மிகவும் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளும், எனவே நெல்லை மாநகரத்தில் சமயம், சாதி, எந்த பிணக்குகளும் ஏற்படாத வண்ணம், இதனால் மோதல்கள் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை  மிக கட்டுக்கோப்பாக நடத்தும் பணியில் ஏற்கனவே  இம்மாநகர காவல்துறை மிக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 

என்னுடைய முதல் பணியாக அப்பணியை இன்னும் உத்வேகப்படுத்தி இம்மாநகரை  சண்டை, சச்சரவுகள் இல்லாத ஒரு மாநகராகவும், குற்றச் செயல்கள் இல்லாத ஒரு மாநகராகவும்  உருவாக்கும் நிலையை தொடர்ந்து இம்மாநகர காவல்துறை செய்ய  நான் உத்வேகமாக இருப்பேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காவல் அலுவலர்களும், காவலர்களும், பொதுமக்களும் மாநகர காவல்துறைக்கு பெரும் உதவியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சமய சாதி பிணக்குகள் வராதவாறு அவர்கள் ஒற்றுமையாக இருக்கும் விதமாக விழிப்புணர்வு கொடுக்கப்படும். அதே போல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான தகவல் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அது குறித்த விழிப்புணர்வும் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும். இங்குள்ள காவல்துறையினர் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதை பார்த்து எந்தெந்த விசயங்களுக்கு, இங்குள்ள பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதன்படி  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார், 

இவர் புதுக்கோட்டையில் துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடர்ந்த இவர் திருவாரூர், கோவை, திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றினார், கடந்த  2020 ஆம் ஆண்டு இவரின் தந்தை பால்சாமி கொரோனாவல் உயிரிழந்தார். அதன் பின்னர் தனது சொந்த வீட்டை புனரமைத்து பாலா படிப்பகம் என நூலகமாக மாற்றினார்,தனது கிராமத்திற்காக தனது சொந்த முயற்சியில் இவர் எடுத்த முன்னெடுப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget