மேலும் அறிய

நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..

வீடு இடிந்து குழந்தை பலி, விவசாய நீரில் மூழ்கிய பயிர்கள், ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் என நெல்லையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

நெல்லை மாவட்டம் களக்காடு கீழபத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சூர்யாவிற்கு 2 பெண்  குழந்தையும் ஒரு பையனும் உள்ளனர்.  நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையால்  இன்று அதிகாலை வீட்டின் பின்பக்க சுவர் திடீரென இடிந்து வீட்டிற்குள் விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை அருள் பேபி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் குழந்தை அருள் பேபி படுகாயமடைந்தாள். அவரது தாய் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை அருள் பேபி பரிதாபமாக உயிரிழந்து. இதுகுறித்து களக்காடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..


அதேபோல களக்காடு நெட்டேரி அருவியில் பெய்த கனமழை காரணமாக நாங்குநேரியான் கால்வாய்யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, முன்னதாக தீபாவளி பண்டிகையொட்டி நாங்குநேரியான் கால்வாய் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பெண் வெள்ளநீரில் அடித்து   செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாதவாறு களக்காடு - சிதம்பராபுரம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..

நாங்குநேரி வீரான்குளம் உடைந்ததில் ஊருக்குள் புகுந்த வெள்ளம் புகுந்தது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.  இது குறித்து  நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தும் அவர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறி ஆத்திரத்தில் பொதுமக்கள் ஏர்வாடி சாலையில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி வழியாக அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது, அதன்  பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது, 


நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..

 களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழை  காரணமாக களக்காடு , மூங்கிலடி , ஏர்வாடி , சிறுமளஞ்சி , ஆனைகுளம் உள்ளிட்ட  பகுதிகளில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வீணானது, இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்ததோடு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்


நெல்லை மாவட்டம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்..

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை செய்து வரும் சூழலில் களக்காடு தலையணை அருவி, நம்பி கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது, தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தலையணை அருவிக்கு பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Embed widget