தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை - 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
’’கீழூர் ரயில் நிலைய தண்டவாளம் மழை நீரில் மூழ்கியதால் முத்துநகர் ரயிலானது மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கேயே பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்’’

வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வந்த மழையால், மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, திருச்செந்தூர், ஆலந்தலை, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது இரவிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் தூத்துக்குடியில் பெய்த தொடர் மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளான பிரையண்ட் நகர், ராஜிவ் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் பம்புகளை கொண்டு அகற்றும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது.


Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















