மேலும் அறிய

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு

குமரியில் விபத்து எதிரொலியாக மூடிய துறைமுகத்தை திறந்து சிலர் மீன் விற்பனை செய்ததால் பரபரப்பு.

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த சில ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரையிலும் 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மீன்பிடித்துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கும் முன்பு பலி எண்ணிக்கை அதிகரித்ததால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர்.
 
இதற்கிடையில் வெளியூரில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் துறைமுக முகத்து வாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 9 விசை படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த விசைப்படகுளில் இருந்த மீன்கள் துறைமுகத்தில் இறக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறைமுகம் மூடுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது.
 

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு
 
ஆனாலும் சிறு வள்ளங்களில் மீன் பிடிக்க அப்பகுதி மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கிடையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 40 -க்கும் அதிகமான படகுகள் தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்தன. அதில் சில படகுகள் அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து உள்ளே மீன் இறக்கி விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மீன் இறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
 

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு
 
 
இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தொடர் போராட்டத்தின் விளைவாகத்தான் மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடையில் கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இறக்கியுள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதே நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காத நிலை உள்ளது. குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் சென்ற போது மீன் விற்க விடாமல் விரட்டியுள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்குமா? துறைமுகம் முகத்துவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பேற்பார்களா? குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மீன் விற்க அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Embed widget