மேலும் அறிய

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு

குமரியில் விபத்து எதிரொலியாக மூடிய துறைமுகத்தை திறந்து சிலர் மீன் விற்பனை செய்ததால் பரபரப்பு.

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த சில ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதுவரையிலும் 29 உயிரிழப்புகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து உள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மீன்பிடித்துறை முகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.245 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கும் முன்பு பலி எண்ணிக்கை அதிகரித்ததால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர்.
 
இதற்கிடையில் வெளியூரில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் துறைமுக முகத்து வாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 9 விசை படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த விசைப்படகுளில் இருந்த மீன்கள் துறைமுகத்தில் இறக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறைமுகம் மூடுவதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது.
 

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு
 
ஆனாலும் சிறு வள்ளங்களில் மீன் பிடிக்க அப்பகுதி மீனவர்கள் சென்று வந்தனர். இதற்கிடையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 40 -க்கும் அதிகமான படகுகள் தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்தன. அதில் சில படகுகள் அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து உள்ளே மீன் இறக்கி விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மீன் இறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
 

கன்னியாகுமரியில் மூடிய துறைமுகத்தில் மீன் விற்பனை செய்த நபர்களால் பரபரப்பு
 
 
இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், தொடர் போராட்டத்தின் விளைவாகத்தான் மறு சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடையில் கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்ற விசை படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இறக்கியுள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதே நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காத நிலை உள்ளது. குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் சென்ற போது மீன் விற்க விடாமல் விரட்டியுள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்குமா? துறைமுகம் முகத்துவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பேற்பார்களா? குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மீன் விற்க அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget