Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது கழுத்தில் காயம் ஏற்பட்ட இந்திய அணி கேப்டன் சுப்மான் கில், குவஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட்:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் நாளை காலை 9:00 மணிக்கு கவுகாத்தியில் உள்ள ACA மைதானத்தில் தொடங்குகிறது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் முதல் போட்டியின் போது கழுத்து பிடிப்பு தொடர்பான காயம் ஏற்பட்டதால், இந்தியாவின் வழக்கமான டெஸ்ட் கேப்டனான சுப்மான் கில் இந்தப் போட்டியை இழக்க நேரிடும். மேலும் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார்.
கில் விலகல் - பண்ட் கேப்டன்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
" தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது கழுத்தில் காயம் ஏற்பட்ட இந்திய அணி கேப்டன் சுப்மான் கில், குவஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். "
" துரதிர்ஷ்டவசமாக, அவர் 2வது டெஸ்டில் விளையாட முழுமையாக உடல் தகுதி பெறவில்லை, மேலும் அவரது காயம் குறித்து மேலும் மதிப்பீடு செய்ய மும்பைக்கு செல்வார். கில் இல்லாத நிலையில், 2வது டெஸ்டில் ரிஷப் பந்த் அணியை வழிநடத்துவார் " என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
🚨 Update 🚨#TeamIndia captain Shubman Gill, who suffered a neck injury during the first Test against South Africa, has been ruled out of the second Test in Guwahati.
— BCCI (@BCCI) November 21, 2025
Rishabh Pant will lead the team in the 2nd Test in his absence.
Details 🔽 | #INDvSA | @IDFCFIRSTBank…
முதல் இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மான் கில் நீக்கப்பட்டவுடன், போட்டியை நடத்தும் அணியின் தற்காலிக கேப்டனாக பண்ட் பொறுப்பேற்றார்.
பண்ட் வீரர் மூத்த வீரராக உள்ளதால் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது, மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளை கேப்டனாக வழிநடத்தியுள்ளார்
இந்திய அணியில் கில்லை பதில் யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனும், பேட்டிங் ஆல்ரவுண்டருமான நிதிஷ் குமார் ரெட்டியும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் இருந்துள்ளனர்.
கொல்கத்தாவில் நடந்த முதல் IND vs SA டெஸ்டில் இருவரும் விளையாடவுள்ளனர். அணியில் அக்சருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது
வரவிருக்கும் போட்டியில் அணி எதைத் தேடுகிறது என்பதைப் பொறுத்துதான் முடிவு இருக்க வேண்டும் கூடுதல் வேகப்பந்து வீச்சு விருப்பம் தேவைப்பட்டால் அதற்கு ரெட்டி சிறந்தவராக இருக்கலாம், அல்லது முற்றிலும் பேட்டிங் விருப்பம் வேண்டும் என்றால் அதற்கு சுதர்சன் சிறந்த தேர்வாக இருப்பார்.





















