மேலும் அறிய

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை

கோயம்புத்தூரில் ஜமேஷா முபீனின் கூட்டாளிகளிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் முகமது உசேன் மண்பேயிடம் போலீசார் விசாரணை.

கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை ஏற்பட்ட கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஜமேசா முபீன் என்ற நபர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஐந்து பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் வீட்டில் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல் உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நேற்று இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் மண்பேயிடம் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.



கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை

அதை தொடர்ந்து தற்போது நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஏகே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் மண்பே என்பவரிடம் ஆய்வாளர் ரவீந்திரன் ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதை ஒட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகமது உசேன் மண்பே ஏற்கனவே கோயம்புத்தூரில் மத குருவாக இருந்துள்ளார். தற்போதும் அவர் இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் மேலப்பாளையத்தில் இருந்தபடி தற்போது அவர் டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை

சமீபத்தில் முகமது உசேன் மண்பே வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. எனவே கோயம்புத்தூரில் ஜமேஷா முபீனின் கூட்டாளிகளிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் முகமது உசேன் மண்பேயிடம் போலீசார் கடந்த மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை குறித்து நெல்லை மாநகர காவல் துணையாளர் அனிதா மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து முகமது உசேன் மண்பே வீட்டில் போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். மூன்று மணி நேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்ற நிலையில், அவரது வீட்டில் இருந்து எதுவும் கைப்பேற்றப்படவில்லை, தேவைப்படும் பட்டத்தில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் முகமது உசேன் மண்பேயிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து அங்கு  குவிக்கப்பட்ட காவல்துறையினர் திரும்ப பெறப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget