மேலும் அறிய

நெருங்கும் பொங்கல் திருநாள் - மண் எடுக்க நீடிக்கும் தடையால் மண்பாண்ட தொழிலாளர்கள் அவதி

’’நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இலவச மண் எடுக்க தடை நீடித்து வருவதால் மண்பாண்டம் செய்ய முடியாத நிலை உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை’’

மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு ஆண்டுக்கு 80 யூனிட் மணல் இலவசமாக எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண்ணெடுத்து மண்பானைகள், அகல் விளக்குகள், உண்டியல், அடுப்பு, தெய்வத் திருவுருவங்கள், பொம்மைகள் போன்ற மண்பாண்ட பொருட்கள் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வருகின்றனர். இந்த சூழலில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மண் பண்டங்களை எடுத்துக் கொண்டு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறும் பொழுது, 


நெருங்கும் பொங்கல் திருநாள் - மண் எடுக்க நீடிக்கும் தடையால் மண்பாண்ட தொழிலாளர்கள் அவதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மண்பாண்ட தொழில் நலிவடைந்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, இதனால் எவ்வித வருமானமும் இன்றி மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததாக கூறப்பட்டது, இதனால்  மண்பாண்டத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.


நெருங்கும் பொங்கல் திருநாள் - மண் எடுக்க நீடிக்கும் தடையால் மண்பாண்ட தொழிலாளர்கள் அவதி

ஆனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆயிரத்து 56 பேர் மட்டுமே மழைக்கால நிவாரணம் வழங்க பட்டுள்ளது. மீதமுள்ள தொழிலாளர்கள் கதர் கிராம தொழில் வாரிய அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் இதுவரை எந்தவித நிவாரணம் கிடைக்கப் பெறாமல் தவித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். மேலும் மீனவர்களுக்கு தமிழக அரசு மழைக்கால நிவாரணம் வழங்குவதைப் போன்று தங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை நிவாரணம் வழங்கிட வேண்டுமென திருநெல்வேலி மாவட்டம் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர், மேலும் நெருங்கி வரும் பொங்கல் பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் மண்பானைகள் உள்ளிட்ட மண்ணாலான பொருட்கள் செய்வதற்கு குளத்து மண் கிடைக்காமல் தவித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்,  


நெருங்கும் பொங்கல் திருநாள் - மண் எடுக்க நீடிக்கும் தடையால் மண்பாண்ட தொழிலாளர்கள் அவதி

தமிழகம் முழுவதும் இலவசமாக குளத்து மண் எடுத்து மண்பாண்டத் தொழில் செய்ய அரசாணை இருந்தும் நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து இலவச மண் எடுக்க தடை நீடித்து வருவதாகவும்,  மழை காலங்களில் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வாழ்வாதாரம் இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உடனடியாக இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்,  பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டம் செய்ய போதுமான மண் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களுடன் வந்து மனு அளித்து சென்றனர்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget