மேலும் அறிய

எதிர்க்கட்சி என்பதால் நெல்லை தொகுதி புறக்கணிப்பு - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மழையால் சந்திக்க உள்ள பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே 10 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி நிர்வாகமும் எடுக்கவில்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய  கனமழையானது கொட்டித் தீர்த்தது, இதனால் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது, குறிப்பாக கோடகன் கால்வாய் மூலம் நீர்வரத்து பெரும்  கிருஷ்ணாபேரி, கண்டியபேரி ஆகிய குளங்கள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது, இதனால் டவுன் காட்சி மண்டபம், வழுக்கோடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர். ஆனால் நேற்று மாநகரில் மழை என்பது இல்லை, இருப்பினும் டவுண் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவல்லை. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதிக்குட்பட்ட டவுண் பகுதியில் மழை பாதிப்புகளை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் பார்வையிட்டார்,  


எதிர்க்கட்சி என்பதால் நெல்லை தொகுதி புறக்கணிப்பு - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அப்போது சில தெருக்களில் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்றபடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், பின்னர் தண்ணீர் வெளியேற்றுவதற்காக தனது சொந்த செலவில் டிராக்டர் வரவழைத்து அந்த வண்டியை அவரே ஓட்டினார். பல பகுதியில் அடைப்புகளை சரிசெய்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.


எதிர்க்கட்சி என்பதால் நெல்லை தொகுதி புறக்கணிப்பு - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியில் அவர் கூறும்பொழுது,  கடந்த இரண்டு நாட்களாக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து பல்வேறு  உதவிகளை செய்து வருகிறேன், தொகுதியில் மழை பெய்ததால் சந்திக்க உள்ள பிரச்சனைகள்  குறித்து முன்கூட்டியே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் 10 முறைக்கு மேல் மனு அளித்தேன், ஆனால் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது,  தற்போது தண்ணீரை  அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, மீட்பு பணிகள்  எனது தொகுதியை பொறுத்தவரை மந்தகதியில் நடக்கிறது, அதேபோல்  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் நேரில் ஆய்வு செய்தார், ஆனாலும் அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை,


எதிர்க்கட்சி என்பதால் நெல்லை தொகுதி புறக்கணிப்பு - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  தாமிரபரணி ஆறு வெள்ளநீர் ஊருக்குள் புகாவண்ணம் தடுப்பதற்காக 15 கோடியில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார், ஆனால் நீதிமன்றத்தில்  தடை பெற்று  அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை, அரசு வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதில் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களும் நீர்நிலைகளில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவது ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார். டவுண் பகுதி எதிர்க்கட்சி தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுவதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget